Skip to main content

மகான் சிதம்பரம் சட்டி சுவாமிகளின் 65ம் ஆண்டு குருபூஜை விழா முன்னிட்டு 1000 நபர்களுக்கு அறுசுவை உணவு அன்னதானம்

 திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் புதூர் கிராமத்தில் வாழ்ந்து மறைந்த மகான் சிதம்பரம் சட்டி சுவாமிகளின் மடாலயம் உள்ளது. மகானின் 65ம் ஆண்டு குருபூஜை விழா ஆடி அமாவாசையை முன்னிட்டு அவரது நினைவாக அறநிலையத்துறை, ஊர் பொதுமக்கள் மற்றும் செந்தில்குமார் ஏற்பாட்டில் 1000 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

குருபூஜை விழா ஏற்பாடுகள் அனைத்தையும் ஊர் பொதுமக்கள் சார்பாக செந்தில்குமார் அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்.

அவர் ஜீவசமாதி அடைந்து 103 ஆண்டுகள் ஆகிறது. அவருக்கு 65 ஆம் ஆண்டு குருபூஜை விழா ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று 1000 நபர்களுக்கு சாதம், சாம்பார், வடை, பொரியல், அப்பளம், மோர் உள்ளிட்ட அறுசுவை உணவு அனைவருக்கும் அன்னதானம் வழங்கி சிறப்பாக குருபூஜை விழா நடைபெற்றது.

சிதம்பரம் சட்டி சுவாமிகள் மிகவும் சிறப்பு வாய்ந்த சுவாமிகள். இப்பகுதியில் மகானாக வாழ்ந்து வந்தார். அவர் ஜீவசமாதி அடைந்த இன்றும் அவர்கள் போற்றி வருவதற்கான காரணங்கள் பல மகிமைகள் உள்ளது. அவர் மிகச்சிறந்த சித்த வைத்தியராக அப்பகுதி மக்களுக்கு சுற்றுவட்டார பொது மக்களுக்கு வைத்தியம் செய்து வந்துள்ளார். அவர் சிகிச்சை அளித்தால் நிச்சயம் அனைத்து நோய்களும் குணமாகி உள்ளது. மக்கள் அனைவரும் அவரை மகானாக போற்றி வணங்கியுள்ளனர்.

  அவர் ஜீவசமாதி அடைந்ததிலிருந்து தற்போது வரை 65 ஆண்டு காலமாக குருபூஜை விழா ஆடி அமாவாசை அன்று அவரது நினைவாக இன்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மகான் வாழ்ந்த காலத்தில் அவருடைய பொருட்களை யாராவது களவு செய்ய முயற்சித்தால் அந்த பொருளை தொட்ட உடனே அதே இடத்திலேயே சிலை போல் நின்று கொண்டிருப்பார்களாம். அந்த மகான் வந்து அவர்களை அனுப்பினால் மட்டுமே அந்த இடத்தில் இருந்து நகர முடியும் என்பது அவருடைய சிறப்பாக விளங்கி வந்துள்ளது. அதனை ஊர் பொதுமக்கள் இன்று வரை நினைவுகூர்ந்து அவருடைய சிறப்பை போற்றி வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

திருமண அமைப்பாளர்கள் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில் தமிழ் மாநில‌ BMS உடன்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக திரளான சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.  அந்தக் கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் உள்ள இரண்டு இலட்சம் ‌ திருமண அழைப்பாளர்கள் தொழிலை தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் அமைப்புச் சாரா தொழிலாளர்களாக சேர்க்க‌ வேண்டி‌ தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்ய மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.  சமூக பாதுகாப்பு, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை 70 ஆண்டுகால தொழிற்சங்கமான மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ‌BMS‌ ல்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கம் சார்பில் இதுபோன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு அளிக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில், மாநிலத்...

எம்.எல்.ஏ உத்தரவிட்ட பிறகும் உள்ளூர் திமுக பிரமுகர்களின் தூண்டுதலால் பாதை வசதி ஏற்படுத்தி தராத அதிகாரிகளால் 2 கிலோமீட்டர் சுற்றி செல்லும் அவலம், பாதையை திறக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என கிராம மக்கள் எச்சரிக்கை

  திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், வாழவச்சனூர் கிராமம் காளியம்மன் கோயில் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக அமைத்து வரும் நிலையில் ஆக்கிரமிப்பு  அகற்றப்பட்டு அங்கிருந்த வீடுகள் அகற்றப்பட்டு தற்போது சாலை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது காளியம்மன் கோவில் தெரு 50 குடும்பத்தினை சேர்ந்தவர்களும் பொது பாதை ஏற்படுத்தி தரக்கோரி செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி நேரில் வந்து பார்வையிட்டு பொதுபாதை அமைத்து தர தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் உத்தரவிட்டு சென்றார். இருப்பினும் உள்ளூரில் உள்ள திமுக பிரமுகரின் தூண்டுதலால் ஒருவர் அந்தப் பாதையை ஆக்கிரமிப்பு செய்து தகர சீட் போட்டு அடைத்து மூடிவிட்டார். இதனால் காளியம்மன் கோவில் தெரு ஐம்பது குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பொது வழியில்லாமல் இரண்டு கிலோமீட்டர் சுற்றி தான் தங்கள் சொந்த வீடுகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  அதுமட்டுமில்லாமல் பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர் தங்கள் வீடுகளுக்கு செல்வதற்க...

34 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் மீண்டும் ஒன்றிணைந்த சுவாரஸ்ய நிகழ்ச்சி

  திருவண்ணாமலை வி.டி.எஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் (1986 - 1991) ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் 34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் பழைய நினைவுகளை திரும்பிப் பார்க்கும் அற்புத நிகழ்வாக சிறப்பான முறையில் நடைபெற்றது.  தாங்கள் பயின்றபோது பாடம் எடுத்த இருபால் ஆசிரியர்களை நிகழ்ச்சியில் சிறப்பான வரவேற்பு அளித்து கௌரவித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தாங்கள் பயிற்றுவித்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவதை பெருமிதத்துடன் தங்கள் வாழ்த்துரையில் குறிப்பிட்டு பேசினர்.  இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களின் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து தங்கள் மனதில் அலைமோதும் எண்ணங்களை வெளிப்படுத்தி புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். செயற்குழு உறுப்பினர்கள் ரேகா, கற்பகம், சிவக்குமார், சுரேஷ், சலீம், கார்த்தி, கண்ணன், முத்து உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தனர்.