Skip to main content

கிரிவலப் பாதையில் தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரண்டு கண்களாக பாவிக்கும் அருணாச்சலம் மகா அன்னதான மடம்


திருவண்ணாமலை காஞ்சி சாலை, கிரிவலப் பாதையில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக ஆன்மீக மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் அருணாச்சலம் அடியார்கள், அருணாச்சலம் மகா அண்ணா மடம் என்னும் ஆன்மீக மதத்தை நிறுவி கடந்த 50 ஆண்டு காலமாக ஆன்மீகப் பணியில் சிறப்பான முறையில் ஈடுபட்டு வருகிறார்.

கிரிவலம் வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு மாதா மாதம் அன்னதானம் வழங்கி பக்தர்களின் பசிப்பிணியை போக்கி வருகிறார்.

திருவண்ணாமலை கிரிவலப்பாதை அடிஅண்ணாமலை ஊராட்சியை சேர்ந்த கே.அருணாச்சலம் அவர்கள் பாஜக ஆன்மீகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவின் மாவட்ட தலைவராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அருணாச்சலம் மகா அன்னதான மடம் மற்றும் நாகாத்தம்மன் திருக்கோயில் திருப்பணிகளை சிறப்பான முறையில் தொடர்ந்து அருணாச்சலம் அவர்கள் செய்து வருகிறார்.


அங்கு பௌர்ணமி தினத்தன்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஆன்மீகப் பணிகளில் இவர் தொடர்ந்து பல ஆண்டு காலமாக சிறந்து செயல்பட்டு வருகிறார்.

1972 ஆம் ஆண்டு முதல் கடந்த 50 ஆண்டு காலமாக ஆன்மீகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். கிரிவலப் பாதையில் கடந்த 50 ஆண்டு காலமாக தனியார் வசம் இருந்த சந்திர லிங்கத்திற்கு சொந்தமான 53 சென்ட் நிலம் அருணாச்சலம் அவர்களின் தொடர் போராட்டத்தின் பலனாக இந்து சமய அறநிலையத்துறையின் வசம் ஒப்படைக்கப்பட்டது என்பது இவர் பணியின் குறிப்பிடத் தகுந்த சாதனைகள் ஆகும். இவர் இதுபோல் பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பக்தர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக ஆன்மீகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.


இந்து கோயில்கள் மற்றும் அதன் சொத்துக்கள் மாற்று மதத்தினர் உள்ளிட்ட பலராலும் அபகரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அபகரிக்கப்பட்ட கோயில் நிலங்கள் அனைத்தையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து சட்ட போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் மூலம் மீண்டும் கோயிலுக்கு மீட்டு கொடுப்பதை தனது தலையாய கடமையாக கொண்டு செயல்பட்டு வருகிறார்.

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு அனுப்பப்பட்ட மனுவின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு கிரிவலப் பாதையில் உள்ள இந்திரலிங்கம், வள்ளுவர் மடம், வாயுலிங்கம் மற்றும்  முனீஸ்வரன் திருக்கோயில் போன்ற இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அந்தக் கோயில் இடங்களை  இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக சத்திரப்பிரதா சாகு அவர்கள் பொறுப்பில் இருந்தபோது ஈசானிய மைதானம் அருகே இருந்த பூந்தோட்ட நந்தவனத்தின் 4.2 ஏக்கர் நிலத்தை மீட்டு இந்து அறநிலையத்துறையால் யாத்திரிநிவாஸ் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு யாத்திரிகர்களுக்கு தங்குமிடமாக தற்போது பயன்பாட்டுக்கு கொண்டு வந்த பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியவர் அருணாச்சலம் அடியார்கள்.

2668 அடி உயரமுள்ள தீப மலையான அண்ணாமலையார் மலையிலிருந்து மழைக்காலங்களில் உருவாகக்கூடிய நீரோடைகள் ஆக்கிரமிக்கப்பட்டு பிளாட் போடப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட நீரோடை பாதைகளை சீரமைப்பு செய்து  கிரிவலப் பாதையில் உள்ள தாதன் ஓடைகளை  சீரமைப்பதற்கான முயற்சிகளையும் அதற்கான பல்வேறு ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறார்.

அருணாச்சலம் மகா அண்ணா மடத்தில் தெய்வீகப் பணியான ஆன்மீகப் பணியோடு புதிதாக தற்போது தேசியத்தையும் சுதந்திரத்திற்காக போராடிய தேசிய தலைவர்களின் புகைப்படங்களும் கிரிவலப் பாதையில் உள்ள மடத்தில் மிக பிரம்மாண்டமாக கிரிவலம் வருபவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பார்வைக்கு வைத்து தேசியத்தையும் தெய்வீகத்தையும் தனது இரு கண்கள் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் சிறப்பான முறையில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது வைக்கப்பட்டுள்ளது.

பாரதமாதா, தாமரை சின்னம், தெய்வப்புலவர் திருவள்ளுவர், வ உ சிதம்பரனார், சுவாமி விவேகானந்தர், சர்தார் வல்லபாய் பட்டேல், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், முத்துராமலிங்க தேவர், தியாகி கக்கன், கர்மவீரர் காமராசர் போன்ற தலைவர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு அவர்களுக்கு அருணாச்சலம் மகா அன்னதான மடத்தின் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.



 


Comments

Popular posts from this blog

திருமண அமைப்பாளர்கள் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில் தமிழ் மாநில‌ BMS உடன்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக திரளான சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.  அந்தக் கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் உள்ள இரண்டு இலட்சம் ‌ திருமண அழைப்பாளர்கள் தொழிலை தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் அமைப்புச் சாரா தொழிலாளர்களாக சேர்க்க‌ வேண்டி‌ தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்ய மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.  சமூக பாதுகாப்பு, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை 70 ஆண்டுகால தொழிற்சங்கமான மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ‌BMS‌ ல்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கம் சார்பில் இதுபோன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு அளிக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில், மாநிலத்...

எம்.எல்.ஏ உத்தரவிட்ட பிறகும் உள்ளூர் திமுக பிரமுகர்களின் தூண்டுதலால் பாதை வசதி ஏற்படுத்தி தராத அதிகாரிகளால் 2 கிலோமீட்டர் சுற்றி செல்லும் அவலம், பாதையை திறக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என கிராம மக்கள் எச்சரிக்கை

  திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், வாழவச்சனூர் கிராமம் காளியம்மன் கோயில் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக அமைத்து வரும் நிலையில் ஆக்கிரமிப்பு  அகற்றப்பட்டு அங்கிருந்த வீடுகள் அகற்றப்பட்டு தற்போது சாலை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது காளியம்மன் கோவில் தெரு 50 குடும்பத்தினை சேர்ந்தவர்களும் பொது பாதை ஏற்படுத்தி தரக்கோரி செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி நேரில் வந்து பார்வையிட்டு பொதுபாதை அமைத்து தர தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் உத்தரவிட்டு சென்றார். இருப்பினும் உள்ளூரில் உள்ள திமுக பிரமுகரின் தூண்டுதலால் ஒருவர் அந்தப் பாதையை ஆக்கிரமிப்பு செய்து தகர சீட் போட்டு அடைத்து மூடிவிட்டார். இதனால் காளியம்மன் கோவில் தெரு ஐம்பது குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பொது வழியில்லாமல் இரண்டு கிலோமீட்டர் சுற்றி தான் தங்கள் சொந்த வீடுகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  அதுமட்டுமில்லாமல் பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர் தங்கள் வீடுகளுக்கு செல்வதற்க...

34 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் மீண்டும் ஒன்றிணைந்த சுவாரஸ்ய நிகழ்ச்சி

  திருவண்ணாமலை வி.டி.எஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் (1986 - 1991) ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் 34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் பழைய நினைவுகளை திரும்பிப் பார்க்கும் அற்புத நிகழ்வாக சிறப்பான முறையில் நடைபெற்றது.  தாங்கள் பயின்றபோது பாடம் எடுத்த இருபால் ஆசிரியர்களை நிகழ்ச்சியில் சிறப்பான வரவேற்பு அளித்து கௌரவித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தாங்கள் பயிற்றுவித்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவதை பெருமிதத்துடன் தங்கள் வாழ்த்துரையில் குறிப்பிட்டு பேசினர்.  இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களின் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து தங்கள் மனதில் அலைமோதும் எண்ணங்களை வெளிப்படுத்தி புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். செயற்குழு உறுப்பினர்கள் ரேகா, கற்பகம், சிவக்குமார், சுரேஷ், சலீம், கார்த்தி, கண்ணன், முத்து உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தனர்.