Skip to main content

பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் தகுதியுள்ள ஏழைகளை கையேந்த வைக்கும் அவல நிலையை உண்டாக்கும் அரசு அலுவலர்களை கண்டித்து 500க்கும் மேற்பட்ட பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் செயல்படுத்தப்படும் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் ஏழைகளுக்கு வீடு வழங்காமல், மத்திய அரசு திட்டங்களில் ஊழல் செய்வதையே பிழைப்பாக கொண்டிருக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அரசு ஊழியர்களை கண்டித்து தண்டராம்பட்டு ஒன்றிய பாஜக சார்பில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர் K.R.பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக பகுதிக்கு உட்பட்ட தண்டராம்பட்டு ஒன்றியத்தில் மத்திய அரசின் திட்டங்களில் நடைபெறும் ஊழலை கண்டித்து தண்டராம்பட்டு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மாவட்ட தலைவர் K.R.பாலசுப்பிரமணியன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட பார்வையாளர் வி.தசரதன் கண்டன உரை ஆற்றினார்.

முன்னாள் மாவட்ட தலைவர்கள் விஜயன், தர்மன், முன்னாள் மாவட்ட துணை தலைவர் இறை மாணிக்கம், மாவட்ட பொது செயலாளர்கள் சதீஷ்குமார், ரமேஷ், முருகன் , மாவட்ட துணை தலைவர்கள் ராஜ்குமார், சேகர்,முன்னாள் ஒன்றிய தலைவர் தயாநிதி, மாநில உள்ளாட்சி மேம்பாட்டு செயலாளர் தி.அறவாழி , முருகன், 

மாவட்ட செயலாளர்கள், கிருஷ்ணமூர்த்தி,குமரன், ரேணுகா, மாநில செயற்குழு உறுப்பினர் ராஜதமயந்தி,அணி, பிரிவு தலைவர்கள், ரகு, சந்தோஷ், கலாவதி, பாலாஜி, சந்தீஷ், வெங்கடேசன், விஜயராஜ் உள்ளிட்டு 500க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் லஞ்சப் பணம் கொடுக்க முடியாமல் இருக்கும் தகுதியுள்ள ஏழைகளின் பெயர்களை சேர்க்காமல் அலைக்கழிப்பது, தகுதியுள்ள ஏழைகளின் பெயர்கள் இடம் பெற்றால் அவற்றை நீக்குவது, லஞ்ச பணம் பெற்றுக் கொண்டு தகுதியற்றவர்களை வீடு வழங்கும் திட்டத்தில் சேர்ப்பது, பணம் கொடுத்தால் மட்டுமே வீடு வழங்கப்படும் என்று கராராக பொதுமக்களிடம் லஞ்சம் பெற்று கொழுத்து வாழ்வது,

 வீடுகளுக்கு குடிதண்ணீர் கொடுக்காமல் ஜல் ஜீவன் திட்டத்தை பெயரளவுக்கு செயல்படுத்துவது என்று தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் ஊழல் ஆறு ஓடும் அலுவலகமாக மாற்றி தகுதியுள்ள ஏழைகளை கையேந்த வைக்கும் அவல நிலையை உண்டாக்கி இருக்கும் அரசு அலுவலர்களை கண்டித்து 500க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.



Comments

Popular posts from this blog

திருமண அமைப்பாளர்கள் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில் தமிழ் மாநில‌ BMS உடன்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக திரளான சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.  அந்தக் கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் உள்ள இரண்டு இலட்சம் ‌ திருமண அழைப்பாளர்கள் தொழிலை தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் அமைப்புச் சாரா தொழிலாளர்களாக சேர்க்க‌ வேண்டி‌ தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்ய மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.  சமூக பாதுகாப்பு, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை 70 ஆண்டுகால தொழிற்சங்கமான மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ‌BMS‌ ல்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கம் சார்பில் இதுபோன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு அளிக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில், மாநிலத்...

எம்.எல்.ஏ உத்தரவிட்ட பிறகும் உள்ளூர் திமுக பிரமுகர்களின் தூண்டுதலால் பாதை வசதி ஏற்படுத்தி தராத அதிகாரிகளால் 2 கிலோமீட்டர் சுற்றி செல்லும் அவலம், பாதையை திறக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என கிராம மக்கள் எச்சரிக்கை

  திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், வாழவச்சனூர் கிராமம் காளியம்மன் கோயில் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக அமைத்து வரும் நிலையில் ஆக்கிரமிப்பு  அகற்றப்பட்டு அங்கிருந்த வீடுகள் அகற்றப்பட்டு தற்போது சாலை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது காளியம்மன் கோவில் தெரு 50 குடும்பத்தினை சேர்ந்தவர்களும் பொது பாதை ஏற்படுத்தி தரக்கோரி செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி நேரில் வந்து பார்வையிட்டு பொதுபாதை அமைத்து தர தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் உத்தரவிட்டு சென்றார். இருப்பினும் உள்ளூரில் உள்ள திமுக பிரமுகரின் தூண்டுதலால் ஒருவர் அந்தப் பாதையை ஆக்கிரமிப்பு செய்து தகர சீட் போட்டு அடைத்து மூடிவிட்டார். இதனால் காளியம்மன் கோவில் தெரு ஐம்பது குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பொது வழியில்லாமல் இரண்டு கிலோமீட்டர் சுற்றி தான் தங்கள் சொந்த வீடுகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  அதுமட்டுமில்லாமல் பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர் தங்கள் வீடுகளுக்கு செல்வதற்க...

34 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் மீண்டும் ஒன்றிணைந்த சுவாரஸ்ய நிகழ்ச்சி

  திருவண்ணாமலை வி.டி.எஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் (1986 - 1991) ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் 34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் பழைய நினைவுகளை திரும்பிப் பார்க்கும் அற்புத நிகழ்வாக சிறப்பான முறையில் நடைபெற்றது.  தாங்கள் பயின்றபோது பாடம் எடுத்த இருபால் ஆசிரியர்களை நிகழ்ச்சியில் சிறப்பான வரவேற்பு அளித்து கௌரவித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தாங்கள் பயிற்றுவித்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவதை பெருமிதத்துடன் தங்கள் வாழ்த்துரையில் குறிப்பிட்டு பேசினர்.  இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களின் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து தங்கள் மனதில் அலைமோதும் எண்ணங்களை வெளிப்படுத்தி புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். செயற்குழு உறுப்பினர்கள் ரேகா, கற்பகம், சிவக்குமார், சுரேஷ், சலீம், கார்த்தி, கண்ணன், முத்து உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தனர்.