சுயமாக டிராக்டர் ஓட்டி விவசாயம் செய்து வரும் 21 வயது பெண்மணி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட சாதனை மகளிருக்கு சுஷ்மா சுவராஜ் விருதுகள், பாஜக மகளிர் அணி சார்பில் வழங்கப்பட்டது
திருவண்ணாமலையில் வேலூர் பெருங்கோட்ட பாஜக மகளிர் அணி சார்பில் மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மகளிர் அணி செயற்குழு கூட்டம், மகளிர் தினத்தை முன்னிட்டு சுஷ்மா சுவராஜ் விருது வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை திருவண்ணாமலை சின்னக்கடை வீதியில் உள்ள லோட்டஸ் மஹாலில் நடைபெற்றது.
விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக மகளிர் அணி மாநில தலைவர் உமா ரதிராஜன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். 21 வயதில் தானே சுயமாக டிராக்டர் ஓட்டி விவசாயம் செய்து வரும் பெண்மணி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண் சாதனையாளர்கள் 10 பேருக்கு சுஷ்மா சுவராஜ் விருதுகளையும் வழங்கி பாராட்டினார்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.
வேலூர் பெருங்கோட்ட அமைப்பு பொதுச்செயலாளர் குணா அவர்கள் கலந்து கொண்டு வேலூர் பெருங்கோட்ட மகளிர் அணி நிர்வாகிகளிடையே சிறப்புரையாற்றி வழிகாட்டினார். மகளிர் அணி மாவட்ட பார்வையாளர் எஸ்.பி.கே சுப்பிரமணியம், மகளிர் அணி பெருங்கோட்ட பொறுப்பாளர் எச்.கிருஷ்ணசாந்தி, மாநில மகளிர் அணி பார்வையாளர் பரிமளா சம்பத், மாவட்ட பார்வையாளர் தசரதன், மாவட்ட பொதுச்செயலாளர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்திற்கு மகளிர் அணி மாவட்ட தலைவர் கலாவதி தலைமை தாங்கினார்.
மகளிர் அணி மாவட்ட பார்வையாளரும், மாநில செயற்குழு உறுப்பினருமான சோபனா ராணி வரவேற்றார்.
கூட்டத்தில் பாழடைந்து வரும் புராதான கோயில்களை கண்டெடுத்து மகளிர் அணி சார்பில் சீரமைப்பது. ஒன்றியம் தோறும் வார இறுதி நாட்களில் மகளிர் தின சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்துவது. கொண்டம் காரியந்தல் எஸ்டி மக்கள் குடியிருப்பு பகுதியில் பொது சுகாதார வளாகம் அரசு அமைத்து தர வேண்டும், நாராயண குப்பம் நரியூர் மக்கள் குடியிருக்கும் பகுதியில் பொது சுகாதார வளாகம் அமைத்து தர வேண்டும். பத்து மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முதியோர் ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். இல்லம் தேடி கல்வி திட்டத்தையும் முறையாக செயல்படுத்த வேண்டும். திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தில் உள்ள குப்பை அப்புறப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் வேலூர் பெருங்கோட்டத்தைச் சேர்ந்த மகளிர் அணியினர் திருவண்ணாமலை தெற்கு, வடக்கு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 6 மாவட்டங்களை சேர்ந்த மகளிர் அணி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.







Comments
Post a Comment