Skip to main content

Posts

Showing posts from March, 2023

பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் தகுதியுள்ள ஏழைகளை கையேந்த வைக்கும் அவல நிலையை உண்டாக்கும் அரசு அலுவலர்களை கண்டித்து 500க்கும் மேற்பட்ட பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் செயல்படுத்தப்படும் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் ஏழைகளுக்கு வீடு வழங்காமல், மத்திய அரசு திட்டங்களில் ஊழல் செய்வதையே பிழைப்பாக கொண்டிருக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அரசு ஊழியர்களை கண்டித்து தண்டராம்பட்டு ஒன்றிய பாஜக சார்பில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர் K.R.பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக பகுதிக்கு உட்பட்ட தண்டராம்பட்டு ஒன்றியத்தில் மத்திய அரசின் திட்டங்களில் நடைபெறும் ஊழலை கண்டித்து தண்டராம்பட்டு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மாவட்ட தலைவர் K.R.பாலசுப்பிரமணியன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பார்வையாளர் வி.தசரதன் கண்டன உரை ஆற்றினார். முன்னாள் மாவட்ட தலைவர்கள் விஜயன், தர்மன், முன்னாள் மாவட்ட துணை தலைவர் இறை மாணிக்கம், மாவட்ட பொது செயலாளர்கள் சதீஷ்குமார், ரமேஷ், முருகன் , மாவட்ட துணை தலைவர்கள் ராஜ்குமார், சேகர்,முன்னாள் ஒன்றிய தலைவர் தயாநிதி, மாநில உள்ளாட்சி மேம்பாட்டு செயலாளர் தி.அறவாழி...

அரசியலில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீட்டினை அமுல்படுத்தினால் மட்டுமே முழுமையான பெண் விடுதலை கிடைக்கும், அருந்ததி பெண்கள் உரிமை நாள் நிகழ்ச்சியில் தலித் விடுதலை இயக்க மாநில மகளிர் அணி செயலாளர் நதியா பேச்சு

  திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த அகல் மையத்தில் அருந்ததிய பெண்களின் உரிமை நாள் நிகழ்ச்சி உலக மகளிர் தினத்தை ஒட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட அருந்ததி பெண்கள் கலந்து கொண்டு அருந்ததி பெண்கள் வளர்ச்சி பெறுவது குறித்து ஆலோசனை நடத்தினர். மேலும் இந்த நிகழ்ச்சியில் அருந்ததி பெண்கள் நடனம், பாடல், கவிதை, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் இந்த நிகழ்வில் பெண்களின் நலனுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தலித் விடுதலை இயக்கத்தின் மாநில மகளிர் அணி செயலாளர் தலித் நதியா பேசுகையில் கூறியதாவது, பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆண்கள் மட்டும் காரணம் இல்லை அந்த ஆணை பெற்றெடுத்த பெண்ணும் தான் காரணம். சிறு வயதிலிருந்து பெண் பிள்ளைகளை மதிக்க கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளவும் கற்றுக் கொடுக்க வேண்டும். இதை கற்றுக் கொடுக்காத தாய் அவன் செய்கிற குற்றங்களுக்கு காரணமாகிறாள். ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்த நாட்டின் பெண் வளர்ச்சியே, எந்த அளவிற்க...

புதிய ராணுவ மருத்துவமனை கட்டிடம் கட்டும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த தெற்கு பிராந்திய ராணுவ முதன்மை அதிகாரி

   திருவண்ணாமலைக்கு வருகை புரிந்த தெற்கு பிராந்திய முதன்மை ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் இந்திர பாலன் அவர்கள் முன்னாள் ராணுவ வீரர்கள் கேண்டீன் கட்டிடத்தை பார்வையிட்டு பின்னர் புதிதாக கட்டப்பட்டு வரும் கேண்டினின் கட்டுமான பணிகளையும் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து போளூர் சாலையில் உள்ள ஜவான் பவன் கட்டிடத்தை பார்வையிட்டு அங்கிருந்து சென்று புதிதாக ராணுவ மருத்துவமனை கட்டப்படவுள்ள இடத்தினையும் பார்வையிட்டார். ராணுவ மருத்துவமனை கட்டுவதற்கு அரசு அனுமதி வழங்கி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் கட்டிடத்தின் வரைபடத்தை கட்டிடம் கட்டும் இடத்திலிருந்து ஆய்வு செய்து கட்டிடம் கட்டும் பணிகளை துரிதமான முறையில் துவக்குமாறு உத்தரவிட்டார். பின்னர் முன்னால் ராணுவ வீரர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை ஒவ்வொன்றாக கேட்டறிந்தார். முன்னாள் ராணுவ வீரர்களின் சிகிச்சைக்காக அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் சிஎம்சி மருத்துவமனை உள்ளிட்டவை இணைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். கட்டி திறக்கப்பட்ட ஜவான் பவன் கட்டிடம் ராணுவ வீரர்களின் பயன்பாட்டிற்காக செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பன உள...

சுயமாக டிராக்டர் ஓட்டி விவசாயம் செய்து வரும் 21 வயது பெண்மணி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட சாதனை மகளிருக்கு சுஷ்மா சுவராஜ் விருதுகள், பாஜக மகளிர் அணி சார்பில் வழங்கப்பட்டது

திருவண்ணாமலையில் வேலூர் பெருங்கோட்ட பாஜக மகளிர் அணி சார்பில் மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மகளிர் அணி செயற்குழு கூட்டம், மகளிர் தினத்தை முன்னிட்டு சுஷ்மா சுவராஜ் விருது வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை திருவண்ணாமலை சின்னக்கடை வீதியில் உள்ள லோட்டஸ் மஹாலில் நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக மகளிர் அணி மாநில தலைவர் உமா ரதிராஜன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். 21 வயதில் தானே சுயமாக டிராக்டர் ஓட்டி விவசாயம் செய்து வரும் பெண்மணி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண் சாதனையாளர்கள் 10 பேருக்கு சுஷ்மா சுவராஜ் விருதுகளையும் வழங்கி பாராட்டினார். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். வேலூர் பெருங்கோட்ட அமைப்பு பொதுச்செயலாளர் குணா அவர்கள் கலந்து கொண்டு வேலூர் பெருங்கோட்ட மகளிர் அணி நிர்வாகிகளிடையே சிறப்புரையாற்றி வழிகாட்டினார். மகளிர் அணி மாவட்ட பார்வையாளர் எஸ்.பி.கே சுப்பிரமணியம், மகளிர் அணி பெருங்கோட்ட பொறுப்பாளர் எச்.கிருஷ்ணசாந்தி, மாநில மகளிர் அணி பார்வையாளர் பரிமளா சம்பத், மாவட்ட பார்வையாளர் தசரதன்...

25க்கும் மேற்பட்ட கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பிளாக் பெல்ட் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது

 ஜப்பான் ஷிட்டோ ராய் கராத்தே பயிற்சி பள்ளியின் 25க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பிளாக் பெல்ட் மற்றும் சான்றிதழ்களை நகர குற்ற புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் கோமளவல்லி தலைமை தாங்கி மாணவர்களுக்கு வழங்கினார். காவல்துறை பணி செய்து வரும் கராத்தே பயிற்சியாளர் G.விஜய் முன்னிலை வகித்தார். ஜப்பான் சிட்டோ ரியூ கராத்தே பயிற்சி பள்ளி சார்பில் திருவண்ணாமலை நகரின் முத்துவிநாயகர் கோயில் தெருவில் உள்ள காவல்துறை குடியிருப்பில் இன்று காலை 25 க்கும் மேற்பட்ட கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பிளாக் பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி இந்திய தலைவர் (JSKS ) கியோஷி A.ரமேஷ்பாபு அவர்கள் நல்லாசியுடன் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நகர காவல் ஆய்வாளர் ( Inspector) குற்ற புலனாய்வு பிரிவு கோமளவள்ளி தலைமை தாங்கி கராத்தே தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பிளாக் பெல்ட் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.     திருவண்ணாமலை முத்துவிநாயகர் கோயில் தெரு காவலர் குடியிருப்பில் உள்ள கராத்தே G.விஜய் (காவல்துறை) பயிற்சியாளர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார்.  கராத்தே ச.சரவணன் MBA, MTech (Na...