Skip to main content

300-க்கும் மேற்பட்டோர் பயன்பெறும் வகையில் இலவச மருத்துவ முகாம்

 திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் நகரில் உள்ள ஸ்ரீ வாசவி மஹால் ஆரிய வைசிய மகாசபையில் பாண்டிச்சேரி பிம்ஸ் மருத்துவமனை, ஸ்ரீ குமரன் சில்க்ஸ் ரெடிமேட்ஸ் மற்றும் ஹரி மொபைல்ஸ் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடத்தினர்.

மருத்துவ முகாமில் கலந்து கொண்ட 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பொது மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், குழந்தைகள் நலம், பல் மருத்துவம், தோல், மகப்பேறு மருத்துவம், ரத்த கொதிப்பு, இசிஜி, கண் பரிசோதனை உள்ளிட்டவை இலவசமாக செய்யப்பட்டு மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கி ஆலோசனைகளும் பாண்டிச்சேரி பிம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களால் வழங்கப்பட்டது.

 கண்புரை அறுவை சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட மேல் சிகிச்சை தேவைப்படுவோருக்கு பாண்டிச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.

முன்னதாக நிகழ்ச்சியின் துவக்கத்தின் போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் பேசும்போது கூறியதாவது, ஆன்லைன் வர்த்தகத்தை தவிர்த்து இப்பகுதியில் உள்ள சிறு வியாபாரிகளை ஆதரிக்கும் கோரிக்கையுடன் இந்த இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.இதனால் நாட்டிற்கும் வீட்டிற்கும் நல்லது,மேலும் சிறு வியாபாரிகள் தான் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகளுக்கு முதலாவதாக முன்வந்து அனைத்து சேவைகளையும் செய்கின்றனர் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தெரிவித்தார்.

ஆரிய வைசிய சமாஜிய செயலாளர் பாபு என்கிற வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

செஞ்சி லயன் சேகர், தேசிய நெடுஞ்சாலை துறை ஓய்வு பெற்ற பொறியாளர் ராஜேந்திரன், செஞ்சி வள்ளலார் சன்மார்க்க சங்க நிறுவனர் சர்தார் சிங் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

செஞ்சி கன்னிகா மொபைல் மற்றும் சாரிட்டபிள் டிரஸ்டின் நிறுவனர் ரமேஷ் பாபு வரவேற்புரை நிகழ்த்தினார்.

ஆரிய வைசிய சமாஜ துணைத்தலைவர் பாலசுப்ரமணியன் மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார்.

பாண்டிச்சேரி பிம்ஸ் மருத்துவமனை மருத்துவ குழுவினர் 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு தேவையான மருந்துகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.

இந்த முகாமில் ஹரி மொபைல்ஸ் ஹரி கிருஷ்ணன், வியாபாரிகள் சங்க நிர்வாகி கோடீஸ்வரன், சரஸ்வதி ஸ்வீட்ஸ் ராஜேந்திரன், எஸ் பி எஸ் பாத்திரம் பர்னிச்சர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உரிமையாளர் அப்துல் சமத், திண்டிவனம் தமிழறிஞர் சிவப்பிரகாசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 விர்ச்சுவல் மீடியா அருண் முகாமினை ஒருங்கிணைத்தார். 

பேராவூர் சுபாஷ் சந்திர போஸ் நன்றி கூறினார்.

Comments

Popular posts from this blog

திருமண அமைப்பாளர்கள் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில் தமிழ் மாநில‌ BMS உடன்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக திரளான சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.  அந்தக் கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் உள்ள இரண்டு இலட்சம் ‌ திருமண அழைப்பாளர்கள் தொழிலை தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் அமைப்புச் சாரா தொழிலாளர்களாக சேர்க்க‌ வேண்டி‌ தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்ய மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.  சமூக பாதுகாப்பு, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை 70 ஆண்டுகால தொழிற்சங்கமான மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ‌BMS‌ ல்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கம் சார்பில் இதுபோன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு அளிக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில், மாநிலத்...

எம்.எல்.ஏ உத்தரவிட்ட பிறகும் உள்ளூர் திமுக பிரமுகர்களின் தூண்டுதலால் பாதை வசதி ஏற்படுத்தி தராத அதிகாரிகளால் 2 கிலோமீட்டர் சுற்றி செல்லும் அவலம், பாதையை திறக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என கிராம மக்கள் எச்சரிக்கை

  திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், வாழவச்சனூர் கிராமம் காளியம்மன் கோயில் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக அமைத்து வரும் நிலையில் ஆக்கிரமிப்பு  அகற்றப்பட்டு அங்கிருந்த வீடுகள் அகற்றப்பட்டு தற்போது சாலை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது காளியம்மன் கோவில் தெரு 50 குடும்பத்தினை சேர்ந்தவர்களும் பொது பாதை ஏற்படுத்தி தரக்கோரி செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி நேரில் வந்து பார்வையிட்டு பொதுபாதை அமைத்து தர தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் உத்தரவிட்டு சென்றார். இருப்பினும் உள்ளூரில் உள்ள திமுக பிரமுகரின் தூண்டுதலால் ஒருவர் அந்தப் பாதையை ஆக்கிரமிப்பு செய்து தகர சீட் போட்டு அடைத்து மூடிவிட்டார். இதனால் காளியம்மன் கோவில் தெரு ஐம்பது குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பொது வழியில்லாமல் இரண்டு கிலோமீட்டர் சுற்றி தான் தங்கள் சொந்த வீடுகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  அதுமட்டுமில்லாமல் பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர் தங்கள் வீடுகளுக்கு செல்வதற்க...

34 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் மீண்டும் ஒன்றிணைந்த சுவாரஸ்ய நிகழ்ச்சி

  திருவண்ணாமலை வி.டி.எஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் (1986 - 1991) ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் 34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் பழைய நினைவுகளை திரும்பிப் பார்க்கும் அற்புத நிகழ்வாக சிறப்பான முறையில் நடைபெற்றது.  தாங்கள் பயின்றபோது பாடம் எடுத்த இருபால் ஆசிரியர்களை நிகழ்ச்சியில் சிறப்பான வரவேற்பு அளித்து கௌரவித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தாங்கள் பயிற்றுவித்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவதை பெருமிதத்துடன் தங்கள் வாழ்த்துரையில் குறிப்பிட்டு பேசினர்.  இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களின் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து தங்கள் மனதில் அலைமோதும் எண்ணங்களை வெளிப்படுத்தி புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். செயற்குழு உறுப்பினர்கள் ரேகா, கற்பகம், சிவக்குமார், சுரேஷ், சலீம், கார்த்தி, கண்ணன், முத்து உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தனர்.