Skip to main content

Posts

Showing posts from February, 2023

உலக அறிவியல் தினத்தை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் படைப்புகளுடன் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி

 திருவண்ணாமலை அடுத்த வடஆண்டாபட்டு நடுநிலைப் பள்ளியில் உலக அறிவியல் தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் P.மோகன் தலைமையில் மாணவர்களின் அறிவியல் படைப்புகள் செயல்முறை விளக்கங்களுடன் அறிவியல் கண்காட்சி சிறப்பான முறையில் நடைபெற்று, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. திருவண்ணாமலை அடுத்த வடஆண்டாபட்டு அரசு நடுநிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 114 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.இன்று உலக அறிவியல் தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர், வழக்கறிஞர் P.மோகன் தலைமையில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.  அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் படைப்புகள் மற்றும் மாணவர்களின் அறிவியல் செயல்முறை விளக்கங்களுடன் அறிவியல் கண்காட்சியானது மாணவர்களால் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.மேலும் அறிவியல் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டதன் மூலம் மாணவர்கள் தங்களின் அறிவியல் சார்ந்த தனித் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது. மாணவர்களின் படைப்புகள் குறித்து சிறப்பு விருந்தினர்களுக்கு மாணவர்கள் செயல்முறை விளக்கமும் அளித்தனர். ஊராட்சி மன்ற...

300-க்கும் மேற்பட்டோர் பயன்பெறும் வகையில் இலவச மருத்துவ முகாம்

 திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் நகரில் உள்ள ஸ்ரீ வாசவி மஹால் ஆரிய வைசிய மகாசபையில் பாண்டிச்சேரி பிம்ஸ் மருத்துவமனை, ஸ்ரீ குமரன் சில்க்ஸ் ரெடிமேட்ஸ் மற்றும் ஹரி மொபைல்ஸ் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடத்தினர். மருத்துவ முகாமில் கலந்து கொண்ட 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பொது மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், குழந்தைகள் நலம், பல் மருத்துவம், தோல், மகப்பேறு மருத்துவம், ரத்த கொதிப்பு, இசிஜி, கண் பரிசோதனை உள்ளிட்டவை இலவசமாக செய்யப்பட்டு மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கி ஆலோசனைகளும் பாண்டிச்சேரி பிம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களால் வழங்கப்பட்டது.  கண்புரை அறுவை சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட மேல் சிகிச்சை தேவைப்படுவோருக்கு பாண்டிச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. முன்னதாக நிகழ்ச்சியின் துவக்கத்தின் போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் பேசும்போது கூறியதாவது, ஆன்லைன் வர்த்தகத்தை தவிர்த்து இப்பகுதியில் ...

50க்கும் மேற்பட்ட கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பிளாக் பெல்ட் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது

ஜப்பான் ஷிட்டோ ராய் கராத்தே பயிற்சி பள்ளியின் 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பிளாக் பெல்ட் மற்றும் சான்றிதழ்களை பரணி தீபம் லயன் சங்கத் தலைவர் ஆடிட்டர் பச்சையப்பன் தலைமையில், கராத்தே தலைமை பயிற்சியாளர் T.சுரேஷ்குமார் Ex. MLA வழங்கினார். கராத்தே தேசிய நடுவர் Grade A ச.சரவணன் அனைவரையும் வரவேற்று பேசினார். ஜப்பான் ஷிட்டோ ராய் கராத்தே பயிற்சி பள்ளி சார்பில் திருவண்ணாமலை நகரில் உள்ள டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 50க்கும் மேற்பட்ட கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பிளாக் பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா இந்திய தலைமை பயிற்சியாளர் A.ரமேஷ்பாபு அவர்கள் ஆசியுடன் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பரணி தீபம் லயன் சங்கத் தலைவர் ஆடிட்டர் பச்சையப்பன் அவர்கள் தலைமை தாங்கினார். கராத்தே தேசிய நடுவர் Grade A ச.சரவணன் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார். கராத்தே தலைமை பயிற்சியாளர் T.சுரேஷ்குமார் Ex. MLA அவர்கள் வாழ்த்துரை வழங்கி மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். கராத்தே எம்‌.மூர்த்தி, தண்டராம்பட்டு கராத்தே விஜயகுமார், கராத்தே ஏ.எஸ்.பிரபாகரன், கராத்தே K.பாண்டு, கராத்தே அலங்கார் வெங...

தீய சக்தி திமுக கவுன்சிலரால் இந்திய ராணுவ வீரர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து முன்னாள் ராணுவ வீரர்கள் 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம்.

 மறைந்த ராணுவ வீரர் பிரபுவின் திருவுருவப்படத்திற்கு முன்னால் ராணுவ வீரர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி அஞ்சலி. திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கத்தின் சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த திருவண்ணாமலை, ஆரணி, கலசப்பாக்கம், செய்யார், வந்தவாசி, போளூர், கண்ணமங்கலம், கேளூர், களம்பூர், சேத்பட், வேட்டவலம், படவேடு, ஜமீன் கூடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தங்களின் ராணுவ சகோதரர் திமுக கவுன்சிலரால் ஈவு இரக்கமின்றி சட்டவிரோதமான முறையில் படுகொலை சம்பவத்தை அரங்கேற்றிய நபர் மீது உச்சபட்ச நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திமுக கவுன்சிலரை கைது செய்ததோடு மட்டுமல்லாமல் உரிய முறையில் வழக்கு பதிவு செய்து குற்றவாளி மீது அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று முன்னாள் ராணுவ வீரர்கள் வலியுறுத்தினர். முன்னதாக திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அறிவொளி பூங்கா அருகே படுகொலை செய்யப்பட்ட ராணுவ வீரரின் திருவுருவப் படத்திற்கு...

ரூ. 1.3 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட ஊராட்சி மன்ற கட்டிடம் ஊராட்சி மன்ற தலைவர் P.மோகன் தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம், வடஆண்டாப்பட்டு ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் புதுப்பித்தல் பணி ரூபாய் 1.3 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றது. ரூபாய் 1.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டு அனைத்து பணிகளும் முடிவடைந்து இன்று திறக்கப்பட்டது. துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் N.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். ஊராட்சி மன்ற கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் P.மோகன், துணைத் தலைவர் சுசிலா மற்றும் வார்டு உறுப்பினர்கள் மணி, உஷாராணி, நாராயணன், சின்ன பாப்பா, சக்தி, ஊராட்சி செயலர் பி மூர்த்தி, துப்புரவு பணியாளர்கள் தூய்மை காவலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் பி. மோகன் இனிப்புகள் வழங்கினார்.