Skip to main content

துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றிய பாஜக சார்பில் நம்ம ஊரு பொங்கல் விழா, பல்வேறு போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு.

 

திருவண்ணாமலை மாவட்டம், கோவூர் ஊராட்சியில் நம்ம ஊரு பொங்கல் விழா நிகழ்ச்சி துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றிய பாஜக தலைவர் A.தங்கராஜி தலைமையில், மாவட்டத் தலைவர் R.பாலசுப்ரமணியன் முன்னிலையில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்து சிறப்பான முறையில் நடைபெற்றது.

உலகம் போற்றும் உத்தம தலைவர், மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நல்லாசியுடன்,   தமிழகத்தின் அடுத்த முதல்வர், பாஜக மாநில தலைவர், தமிழகத்தின் இளம் சிங்கம் அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் ஆர்.பாலசுப்ரமணியன் B.Sc அவர்களின் ஆலோசனைப்படி துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றிய தலைவர் A.தங்கராஜி M.A அவர்களின் தலைமையில் நம்ம ஊரு பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது.

  திருவண்ணாமலை மாவட்டம், கோவூர் ஊராட்சியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சியில் ஏராளமான தாய்மார்களுக்கு கோலப்போட்டி  மற்றும்  இளைஞர்களுக்கு கயிறு இழுத்தல், சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு ஒன்றிய தலைவர் A.தங்கராஜி மற்றும் மாவட்ட தலைவர் ஆர்.பாலசுப்ரமணியம் உள்ளிட்டோரால் பரிசுகளும் வழங்கப்பட்டன.

  நம்ம ஊரு பொங்கல் விழா நிகழ்ச்சியில் கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பட்டுப் புடவை, பொங்கல் வைக்க சில்வர் பாத்திரம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளும் வழங்கப்பட்டதால் ஊர் பொதுமக்களும், கட்சியின் நிர்வாகிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

ஏராளமான தாய்மார்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து இறைவனை வழிபட்டு பரிசுகளை தட்டிச்சென்றனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் K.கிருஷ்ணன்,  விவசாய அணி தலைவர் K.ஆறுமுகம், கிளைத்தலைவர் D.சந்தோஷ், விவசாய அணி பொதுச்செயலாளர் சக்திவேல், ஓபிசி அணி மாவட்ட செயலாளர் K.தேவேந்திரன், ஊரக வளர்ச்சி பிரிவு தலைவர் B.மணிகண்டன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் A.கோவிந்தராஜி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் A.அபிதா உள்ளிட்டோர் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.

பாஜக மாவட்ட பொது செயலாளர்கள் சதீஷ், முருகன், மாவட்ட பொருளாளர் எஸ்.பி.கே.சுப்பிரமணியன், மாவட்ட இளைஞரணி தலைவர் சந்தோஷ் பரமசிவம், இளைஞரணி பொதுச் செயலாளர் புகழ் மூவேந்தன், ஒன்றிய பொதுச் செயலாளர்கள் எஸ். சங்கர், விக்னேஷ் பாஜக தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பொங்கல் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


Comments

Popular posts from this blog

திருமண அமைப்பாளர்கள் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில் தமிழ் மாநில‌ BMS உடன்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக திரளான சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.  அந்தக் கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் உள்ள இரண்டு இலட்சம் ‌ திருமண அழைப்பாளர்கள் தொழிலை தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் அமைப்புச் சாரா தொழிலாளர்களாக சேர்க்க‌ வேண்டி‌ தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்ய மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.  சமூக பாதுகாப்பு, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை 70 ஆண்டுகால தொழிற்சங்கமான மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ‌BMS‌ ல்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கம் சார்பில் இதுபோன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு அளிக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில், மாநிலத்...

34 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் மீண்டும் ஒன்றிணைந்த சுவாரஸ்ய நிகழ்ச்சி

  திருவண்ணாமலை வி.டி.எஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் (1986 - 1991) ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் 34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் பழைய நினைவுகளை திரும்பிப் பார்க்கும் அற்புத நிகழ்வாக சிறப்பான முறையில் நடைபெற்றது.  தாங்கள் பயின்றபோது பாடம் எடுத்த இருபால் ஆசிரியர்களை நிகழ்ச்சியில் சிறப்பான வரவேற்பு அளித்து கௌரவித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தாங்கள் பயிற்றுவித்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவதை பெருமிதத்துடன் தங்கள் வாழ்த்துரையில் குறிப்பிட்டு பேசினர்.  இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களின் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து தங்கள் மனதில் அலைமோதும் எண்ணங்களை வெளிப்படுத்தி புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். செயற்குழு உறுப்பினர்கள் ரேகா, கற்பகம், சிவக்குமார், சுரேஷ், சலீம், கார்த்தி, கண்ணன், முத்து உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தனர்.

காவலர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்க வலியுறுத்தி ஜனநாயக இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்

  திருவண்ணாமலை மார்கெட்டிற்கு காய்கறிகள் ஏற்றி வந்த ஆந்திர மாநில லோடு வாகனத்தில் வந்த பெண்களை சோதனை என்ற பெயரில் பாலியல் வண்புனர்வு செய்த கிழக்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர்களான சுந்தர், சுரேஷ்ராஜா ஆகிய இருவரையும் கண்டித்து ஜனநாயக இயக்கங்களின் ஒருங்கிணைப்பில் ஏராளமானோர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் காமராஜர் சிலை அருகே நடைபெற்றது. தலித் விடுதலை இயக்கம் மாநில பொதுச் செயலாளர் தோழர் தலித் நதியா ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவலர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்க வேண்டும், குற்றம் செய்யும் காவலர்களை சக காவலர்கள் பாதுகாக்கக் கூடாது எனவும், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் அதிகாரிகளின் பணியை நிரந்தரமாக நீக்க சட்டம் இயற்ற வேண்டும், உழைக்கும் மக்களின் குரலாக செயல்படும் ஆட்சியில் இல்லாத ஜனநாயக இயக்கங்கள், கட்சிகள், அமைப்புகளுக்கு உரிய மதிப்பும், பாதுகாப்பும் வழங்குவது அரசு நிர்வாகம் மற்றும் காவல்துறையின் கடைமை எனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுப்பதையும் கண்டித்து ...