Skip to main content

Posts

Showing posts from December, 2022

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நிறைவு விழா

 திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் கடந்த 24 ஆம் தேதி முதல் 7 நாட்களாக திருவண்ணாமலை அடுத்த சேரியந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. கால்நடை மருத்துவ முகாம், கோயில் வளாகம் தூய்மைப்படுத்தும் பணி, பள்ளி வளாகம் தூய்மைப்படுத்தும் பணி, பள்ளியில் மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு நலப்பணித்திட்ட செயல்பாடுகளில் மாணவிகள் ஈடுபட்டனர். நாட்டு நலப்பணித்திட்ட முகாமின் நிறைவு விழா நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வடஆண்டாபட்டு ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் P.மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளை வாழ்த்தி பேசினார்.  சிறந்த சாதனை மாணவிகளாக நீங்கள் அனைவரும் வர வேண்டும். எந்த உதவி தேவைப்பட்டாலும் அதற்கு என்னை எந்த நேரத்திலும் அணுகலாம் என்று ஊராட்சி மன்ற தலைவர் மோகன் தெரிவித்தார்.  நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிலட்சுமி, சேரியந்தல் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சி.சுகுணா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுசிலா ரேணு, செயலாளர் மூர்த்தி, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் சகுந...

கொட்டும் மழையிலும் 500 கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாமில் சிகிச்சை, சிறந்த பசுங்கன்றுகளுக்கு பரிசு வழங்கி பாராட்டு

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், வடஆண்டாப்பட்டு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர், வழக்கறிஞர் P.மோகன் தலைமையில் கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த கால்நடை சிறப்பு மருத்துவ முகாமில் 500க்கும் மேற்பட்ட கால்நடைகள் கலந்து கொண்டது. கொட்டும் மழையிலும் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், தடுப்பூசி, மலட்டு நீக்க சிகிச்சை, சினை பரிசோதனை உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு கால்நடைகளுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. இந்த முகாமில் நகராட்சி பெண்கள் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த நாட்டு நலப் பணித்திட்ட மாணவிகள் கால்நடை முகாமை நடத்துவதற்கு உதவி புரிவதற்காக கலந்து கொண்டனர், அவர்களுடன் திட்ட அலுவலர்கள் G.சகுந்தலா, K.சுதா, P.நந்தினி தேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.. கால்நடை மருந்தக நூக்காம்பாடி மருத்துவர் முருகவேல், கால்நடை பராமரிப்பு உதவியாளர் பச்சையப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து மருந்துகளை வழங்கினர். வடஆண்டாப்பட்டு ஊராட்சிமன்ற தலைவர், வழக்கறிஞர் P.மோகன் அவர்கள் கால்நடை சிறப்பு மருத்துவ முகாமிற்கான ...

பாஜக வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், மாநில செய்தி தொடர்பாளர் ஆதவன் பங்கேற்பு

 திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சட்டமன்றத் தொகுதி பூத் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கலசப்பாக்கம் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர் K.R.பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாநில செய்தி தொடர்பாளர் ஆதவன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜகவிற்கு உட்பட்ட கலசபாக்கம் சட்டமன்ற தொகுதி , செங்கம் சட்டமன்றத் தொகுதி ஒன்றியங்களான செங்கம் கிழக்கு, மேற்கு ஒன்றியங்கள்,செங்கம் நகர் BLA 2 எனப்படும் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி இன்று திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மாதிமங்கலம் ஏழுமலையான் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் K.R.பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில செய்தி தொடர்பாளர் V.ஆதவன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பெருங்கோட்ட அமைப்பு செயலாளர் குணசேகரன் உள்ளிட்டோர் கலத்து கொண்டு வாக்குச்சாவடி முகவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.  மாவட்ட பொது செயலாளர் ரமேஷ் , மாநில செயற்குழு உறுப்பினர் நேரு, மாவட்ட த...

நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்களுக்கு அன்னதானம், இனிப்பு, உதவித்தொகை வழங்கி குடிநீர் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்த அருணாச்சலம் அடியார்கள்.

 திருவண்ணாமலை கிரிவலப் பாதை காஞ்சி சாலை சந்திரலிங்கம் அருகே ஸ்ரீ அருணாச்சலம் அன்னதான மடம் உள்ளது. ஸ்ரீ அருணாச்சலம் அன்னதான மடம் மற்றும் கிராம திருக்கோயில் திருப்பணி அறக்கட்டளை நிறுவனத் தலைவர் அருணாச்சலம் அடியார்கள் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபம் முடிந்து அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கிரிவலம் வரும்போது ஆண்டாண்டு காலமாக பொதுமக்களுக்கு அன்னதானம், சாதுகளுக்கு வஸ்திர தானம் மற்றும் உதவித்தொகை வழங்கி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டும் கார்த்திகை மாத பௌர்ணமி கிரிவலம் முடிந்து அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் கிரிவலம் வந்தபோது சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காட்டி வணங்கி வழிபட்டார். பின்னர் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானமும், நூற்றுக்கணக்கான கிரிவல தூய்மை பணியாளர்களுக்கு உதவித்தொகை, இனிப்பு சாதுக்களுக்கு வஸ்திரம் உள்ளிட்டவற்றை வழங்கினார். மேலும் கிரிவலம் வரும் பக்தர்கள் தங்களின் தாகம் தணிக்கும் வகையில் குடிநீர் தொட்டியையும் துவக்கி வைத்தார்.  ஆன்மீகப் பணியை 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான முறையில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக ஆன்மீக பிரிவு மாவட்ட செயலாளர் அருணாச்சலம் அடையார...

கார்த்திகை மாத பௌர்ணமி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர், கிரிவலம் வந்த பக்தர்களுக்கு அருணாச்சலம் அடியார்கள் அன்னதானம்

 கார்த்திகை மாத பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்,ஸ்ரீ அருணாச்சலம் அன்னதான மடம் அருணாச்சலம் அடியார்களால் கிரிவலம் வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான கிரிவல பக்தர்களுக்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக ஆன்மிக பிரிவு மாவட்ட செயலாளர் அருணாச்சலம் அடியார் அவர்களால் அன்னதானம் வழங்கப்பட்டது.  பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழாவில் நேற்று அதிகாலை பரணி தீபமும், சிகர நிகழ்ச்சியாக மாலை 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.  இதனையொட்டி சிறப்பு பஸ்கள், ரெயில்கள் மூலம் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர்.  அவ்வாறு வந்த பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர்.  கிரிவலப்பாதையில் மாவட்ட நிர்வாகம் அனுமதித்த இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கார்த்திகை மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலப் பாதை, காஞ்சி சாலையில் உள்ள ஸ்ரீ அருணாச்சலம் அன்னதான மடம், கிராம திருக்கோயில் திருப்பணி அறக்கட்டளை சார்பில்  ஆயிரக்கணக்கான கிர...