Skip to main content

ஏரிக்கரையை கரைத்து, விவசாய நிலத்தை ஆக்கிரமித்து, மக்கள் வரிப்பணத்தில் சொந்த தேவைக்காக சாலை அமைக்கும் திமுக பிரமுகர், புகார் அளித்த விவசாயிக்கு கொலை மிரட்டல்.

 திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் ஒன்றியம், மேல்பாலூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரிக்கரைக்கு கீழ் திமுகவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் சொந்த நிலத்திற்கு செல்ல ஏரிக்கரையை கரைத்து, விவசாய நிலத்தை ஆக்கிரமித்து, மக்கள் வரிப்பணத்தில் சாலை அமைத்து விவசாயி சிவக்குமாருக்கு கொலை மிரட்டல் விடுப்பதால் அதிர்ச்சி.

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் ஒன்றியம், மேல்பாலூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரிக்கரைக்கு கீழ் அதே கிராமத்தில் உள்ள திமுகவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் தனது நிலத்திற்கு செல்ல மக்கள் வரிப்பணத்தில் சாலை அமைத்து வருகிறார்.

பொறியாளரின் சர்வே எதுவும் செய்யாமல், தன்னுடைய சொந்த தேவைக்காக மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தி அவ்வழியாக இருக்கும் ஏரிக்கரை பெரும் பகுதியை கரைத்து, நாசமாக்கி ஏரிக்கரை உடையும் அபாயத்தை ஏற்படுத்தி வருகிறார்.

மேலும் தனிநபர் சிவக்குமார் என்பவரின் பட்டா நிலத்தில் அராஜகமான முறையில் மண்ணைத் தள்ளி சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.


பட்டா நிலத்தில் சாலை போடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்த சிவகுமார் அவர்களை மிரட்டி, கொலை செய்து விடுவேன், ஆளும் கட்சியைச் சேர்ந்தவன் நான் என்பதால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று அராஜக போக்கில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.


 அவருக்கு துணையாக ஊராட்சி மன்ற தலைவரின் கணவன் இளங்கோவன் என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக அவரது மனைவி சரஸ்வதி இளங்கோவன் இருப்பதால் அனைத்து வேலைகளையும் இளங்கோவன் என்பவரே பார்த்து வருகிறார்.


இந்த பட்டா இடத்தில் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தால் உன்னை ஊரில் வாழ விடமாட்டோம், இந்த ஊரில் உன் குடும்பம் வாழ முடியாது. மேலும் இந்த ஊரில் உள்ள எந்த வேலையும் செய்ய விட மாட்டோம், யாரும் உனக்கு ஆதரவாக வர மாட்டார்கள், நான் தலைவராக இருப்பதால் என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது, 5 வருடம் என்னுடைய இஷ்டத்திற்கு தான் நான் வேலை செய்வேன் என்று அசிங்கமான வார்த்தைகளில் கொச்சையாக தனது பொறுப்புக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசி வருகிறார்.


இதனால் வேதனை அடைந்த சிவக்குமார் அரசாங்க அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பயனும் இல்லை. காவல்துறைக்கு பலமுறை புகார் தெரிவித்தும் புகாரை வாங்க மறுத்து தங்கள் பணியை செய்யாமல் நீதிமன்றத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.


எனவே மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல் துறையும் இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து, பட்டா நிலத்தை பயன்படுத்தி சாலை அமைக்க கூடாது என்று சிவக்குமார் என்ற விவசாயி வேதனையுடன் தன் கோரிக்கையை முன் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

திருமண அமைப்பாளர்கள் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில் தமிழ் மாநில‌ BMS உடன்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக திரளான சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.  அந்தக் கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் உள்ள இரண்டு இலட்சம் ‌ திருமண அழைப்பாளர்கள் தொழிலை தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் அமைப்புச் சாரா தொழிலாளர்களாக சேர்க்க‌ வேண்டி‌ தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்ய மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.  சமூக பாதுகாப்பு, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை 70 ஆண்டுகால தொழிற்சங்கமான மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ‌BMS‌ ல்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கம் சார்பில் இதுபோன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு அளிக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில், மாநிலத்...

34 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் மீண்டும் ஒன்றிணைந்த சுவாரஸ்ய நிகழ்ச்சி

  திருவண்ணாமலை வி.டி.எஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் (1986 - 1991) ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் 34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் பழைய நினைவுகளை திரும்பிப் பார்க்கும் அற்புத நிகழ்வாக சிறப்பான முறையில் நடைபெற்றது.  தாங்கள் பயின்றபோது பாடம் எடுத்த இருபால் ஆசிரியர்களை நிகழ்ச்சியில் சிறப்பான வரவேற்பு அளித்து கௌரவித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தாங்கள் பயிற்றுவித்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவதை பெருமிதத்துடன் தங்கள் வாழ்த்துரையில் குறிப்பிட்டு பேசினர்.  இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களின் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து தங்கள் மனதில் அலைமோதும் எண்ணங்களை வெளிப்படுத்தி புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். செயற்குழு உறுப்பினர்கள் ரேகா, கற்பகம், சிவக்குமார், சுரேஷ், சலீம், கார்த்தி, கண்ணன், முத்து உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தனர்.

காவலர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்க வலியுறுத்தி ஜனநாயக இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்

  திருவண்ணாமலை மார்கெட்டிற்கு காய்கறிகள் ஏற்றி வந்த ஆந்திர மாநில லோடு வாகனத்தில் வந்த பெண்களை சோதனை என்ற பெயரில் பாலியல் வண்புனர்வு செய்த கிழக்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர்களான சுந்தர், சுரேஷ்ராஜா ஆகிய இருவரையும் கண்டித்து ஜனநாயக இயக்கங்களின் ஒருங்கிணைப்பில் ஏராளமானோர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் காமராஜர் சிலை அருகே நடைபெற்றது. தலித் விடுதலை இயக்கம் மாநில பொதுச் செயலாளர் தோழர் தலித் நதியா ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவலர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்க வேண்டும், குற்றம் செய்யும் காவலர்களை சக காவலர்கள் பாதுகாக்கக் கூடாது எனவும், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் அதிகாரிகளின் பணியை நிரந்தரமாக நீக்க சட்டம் இயற்ற வேண்டும், உழைக்கும் மக்களின் குரலாக செயல்படும் ஆட்சியில் இல்லாத ஜனநாயக இயக்கங்கள், கட்சிகள், அமைப்புகளுக்கு உரிய மதிப்பும், பாதுகாப்பும் வழங்குவது அரசு நிர்வாகம் மற்றும் காவல்துறையின் கடைமை எனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுப்பதையும் கண்டித்து ...