Skip to main content

ஏரிக்கரையை கரைத்து, விவசாய நிலத்தை ஆக்கிரமித்து, மக்கள் வரிப்பணத்தில் சொந்த தேவைக்காக சாலை அமைக்கும் திமுக பிரமுகர், புகார் அளித்த விவசாயிக்கு கொலை மிரட்டல்.

 திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் ஒன்றியம், மேல்பாலூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரிக்கரைக்கு கீழ் திமுகவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் சொந்த நிலத்திற்கு செல்ல ஏரிக்கரையை கரைத்து, விவசாய நிலத்தை ஆக்கிரமித்து, மக்கள் வரிப்பணத்தில் சாலை அமைத்து விவசாயி சிவக்குமாருக்கு கொலை மிரட்டல் விடுப்பதால் அதிர்ச்சி.

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் ஒன்றியம், மேல்பாலூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரிக்கரைக்கு கீழ் அதே கிராமத்தில் உள்ள திமுகவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் தனது நிலத்திற்கு செல்ல மக்கள் வரிப்பணத்தில் சாலை அமைத்து வருகிறார்.

பொறியாளரின் சர்வே எதுவும் செய்யாமல், தன்னுடைய சொந்த தேவைக்காக மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தி அவ்வழியாக இருக்கும் ஏரிக்கரை பெரும் பகுதியை கரைத்து, நாசமாக்கி ஏரிக்கரை உடையும் அபாயத்தை ஏற்படுத்தி வருகிறார்.

மேலும் தனிநபர் சிவக்குமார் என்பவரின் பட்டா நிலத்தில் அராஜகமான முறையில் மண்ணைத் தள்ளி சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.


பட்டா நிலத்தில் சாலை போடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்த சிவகுமார் அவர்களை மிரட்டி, கொலை செய்து விடுவேன், ஆளும் கட்சியைச் சேர்ந்தவன் நான் என்பதால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று அராஜக போக்கில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.


 அவருக்கு துணையாக ஊராட்சி மன்ற தலைவரின் கணவன் இளங்கோவன் என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக அவரது மனைவி சரஸ்வதி இளங்கோவன் இருப்பதால் அனைத்து வேலைகளையும் இளங்கோவன் என்பவரே பார்த்து வருகிறார்.


இந்த பட்டா இடத்தில் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தால் உன்னை ஊரில் வாழ விடமாட்டோம், இந்த ஊரில் உன் குடும்பம் வாழ முடியாது. மேலும் இந்த ஊரில் உள்ள எந்த வேலையும் செய்ய விட மாட்டோம், யாரும் உனக்கு ஆதரவாக வர மாட்டார்கள், நான் தலைவராக இருப்பதால் என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது, 5 வருடம் என்னுடைய இஷ்டத்திற்கு தான் நான் வேலை செய்வேன் என்று அசிங்கமான வார்த்தைகளில் கொச்சையாக தனது பொறுப்புக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசி வருகிறார்.


இதனால் வேதனை அடைந்த சிவக்குமார் அரசாங்க அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பயனும் இல்லை. காவல்துறைக்கு பலமுறை புகார் தெரிவித்தும் புகாரை வாங்க மறுத்து தங்கள் பணியை செய்யாமல் நீதிமன்றத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.


எனவே மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல் துறையும் இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து, பட்டா நிலத்தை பயன்படுத்தி சாலை அமைக்க கூடாது என்று சிவக்குமார் என்ற விவசாயி வேதனையுடன் தன் கோரிக்கையை முன் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

திருமண அமைப்பாளர்கள் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில் தமிழ் மாநில‌ BMS உடன்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக திரளான சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.  அந்தக் கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் உள்ள இரண்டு இலட்சம் ‌ திருமண அழைப்பாளர்கள் தொழிலை தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் அமைப்புச் சாரா தொழிலாளர்களாக சேர்க்க‌ வேண்டி‌ தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்ய மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.  சமூக பாதுகாப்பு, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை 70 ஆண்டுகால தொழிற்சங்கமான மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ‌BMS‌ ல்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கம் சார்பில் இதுபோன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு அளிக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில், மாநிலத்...

எம்.எல்.ஏ உத்தரவிட்ட பிறகும் உள்ளூர் திமுக பிரமுகர்களின் தூண்டுதலால் பாதை வசதி ஏற்படுத்தி தராத அதிகாரிகளால் 2 கிலோமீட்டர் சுற்றி செல்லும் அவலம், பாதையை திறக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என கிராம மக்கள் எச்சரிக்கை

  திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், வாழவச்சனூர் கிராமம் காளியம்மன் கோயில் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக அமைத்து வரும் நிலையில் ஆக்கிரமிப்பு  அகற்றப்பட்டு அங்கிருந்த வீடுகள் அகற்றப்பட்டு தற்போது சாலை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது காளியம்மன் கோவில் தெரு 50 குடும்பத்தினை சேர்ந்தவர்களும் பொது பாதை ஏற்படுத்தி தரக்கோரி செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி நேரில் வந்து பார்வையிட்டு பொதுபாதை அமைத்து தர தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் உத்தரவிட்டு சென்றார். இருப்பினும் உள்ளூரில் உள்ள திமுக பிரமுகரின் தூண்டுதலால் ஒருவர் அந்தப் பாதையை ஆக்கிரமிப்பு செய்து தகர சீட் போட்டு அடைத்து மூடிவிட்டார். இதனால் காளியம்மன் கோவில் தெரு ஐம்பது குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பொது வழியில்லாமல் இரண்டு கிலோமீட்டர் சுற்றி தான் தங்கள் சொந்த வீடுகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  அதுமட்டுமில்லாமல் பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர் தங்கள் வீடுகளுக்கு செல்வதற்க...

34 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் மீண்டும் ஒன்றிணைந்த சுவாரஸ்ய நிகழ்ச்சி

  திருவண்ணாமலை வி.டி.எஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் (1986 - 1991) ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் 34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் பழைய நினைவுகளை திரும்பிப் பார்க்கும் அற்புத நிகழ்வாக சிறப்பான முறையில் நடைபெற்றது.  தாங்கள் பயின்றபோது பாடம் எடுத்த இருபால் ஆசிரியர்களை நிகழ்ச்சியில் சிறப்பான வரவேற்பு அளித்து கௌரவித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தாங்கள் பயிற்றுவித்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவதை பெருமிதத்துடன் தங்கள் வாழ்த்துரையில் குறிப்பிட்டு பேசினர்.  இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களின் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து தங்கள் மனதில் அலைமோதும் எண்ணங்களை வெளிப்படுத்தி புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். செயற்குழு உறுப்பினர்கள் ரேகா, கற்பகம், சிவக்குமார், சுரேஷ், சலீம், கார்த்தி, கண்ணன், முத்து உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தனர்.