Skip to main content

மதம் மாற்ற சுற்றுச்சுவர் பிரச்சனையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மூலம் தீர்வு காணப்படும் என மாவட்டத் தலைவர் ஜீவானந்தம் உறுதி

 மதம் மாற மறுத்தவர்களின் வழியை மறித்து சுற்றுச் சுவர் எழுப்பிய பாதிரியார், நேரில் சென்று ஆய்வு செய்த பாஜக மாவட்டத் தலைவர், பிரச்சனைக்கு தீர்வு காண ஆர்டிஓ தலைமையில் சமாதானப் பேச்சுக்கு ஏற்பாடு

திருவண்ணாமலை மாவட்டம் மருத்துவாம்பாடி கிராமத்தில் மதம் மாற மறுத்ததால் பொது வழியை மறித்து சுற்றுச்சுவர் எழுப்புவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் ஆலோசனையின் பெயரில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் R.ஜீவானந்தம் மற்றும் பாஜக குழுவினர் நேரில் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

சுற்றுச்சுவர் எழுப்பப்பட்ட இடத்தை ஆய்வு செய்த பின்னர் பொதுமக்களின் கருத்துக்களை மாவட்டத் தலைவர் ஜீவானந்தம் கேட்டறிந்தார். பின்னர் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு பொதுமக்களின் கருத்துக்களையும், கோரிக்கைகளையும் அனுப்பி வைத்து இந்தப் பிரச்சனைக்கு நல்ல தீர்வு ஏற்படுத்தப்படும் என்று பொதுமக்களிடம் நம்பிக்கை தெரிவித்தார். 

இந்த நிலையில் கிறிஸ்தவ மற்றும் இந்து ஆதிதிராவிடர் இருதரப்பினருக்கும் இடையே நடைபாதையில் நடந்து செல்வது சம்பந்தமாக பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் காவல்துறையினர் அப்பகுதியில் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் நாளை இருதரப்பினரையும் அழைத்து ஆர்டிஓ தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக மாவட்டத் தலைவர் ஆய்வு செய்ய வந்தபோது மருத்துவாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த மாவட்ட பாஜக மகளிரணி செயலாளர் ஷோபா ஜான் ரூபன், மீண்டும் 2வது முறையாக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள R.ஜீவானந்தம் அவர்களை வரவேற்று, பொன்னாடை போர்த்தி, மலர்மாலை அணிவித்து வாழ்த்தினார்.

மேலும் மாவட்ட பொதுச் செயலாளர் சதீஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் கருணாகரன், மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் பிரபாகரன்,ஒன்றிய தலைவர் பழனி, நகர தலைவர் திருமாறன், நகர பொதுச் செயலாளர் செந்தில்வேல், ஒன்றிய மகளிரணி செயலாளர் வள்ளி, ஓபிசி அணி நகர செயலாளர் ஸ்ரீதர், நகர பொருளாளர் சரவணன், ஒன்றிய பொதுச் செயலாளர் யுவராஜ், முருகன் உள்ளிட்ட ஏராளமான பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

Comments

  1. அரசாங்கம் இந்த ஆசீரியர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுகிறோம்

    ReplyDelete
  2. இந்த ஆசீரியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டுகிறோம்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

திருமண அமைப்பாளர்கள் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில் தமிழ் மாநில‌ BMS உடன்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக திரளான சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.  அந்தக் கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் உள்ள இரண்டு இலட்சம் ‌ திருமண அழைப்பாளர்கள் தொழிலை தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் அமைப்புச் சாரா தொழிலாளர்களாக சேர்க்க‌ வேண்டி‌ தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்ய மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.  சமூக பாதுகாப்பு, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை 70 ஆண்டுகால தொழிற்சங்கமான மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ‌BMS‌ ல்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கம் சார்பில் இதுபோன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு அளிக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில், மாநிலத்...

34 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் மீண்டும் ஒன்றிணைந்த சுவாரஸ்ய நிகழ்ச்சி

  திருவண்ணாமலை வி.டி.எஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் (1986 - 1991) ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் 34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் பழைய நினைவுகளை திரும்பிப் பார்க்கும் அற்புத நிகழ்வாக சிறப்பான முறையில் நடைபெற்றது.  தாங்கள் பயின்றபோது பாடம் எடுத்த இருபால் ஆசிரியர்களை நிகழ்ச்சியில் சிறப்பான வரவேற்பு அளித்து கௌரவித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தாங்கள் பயிற்றுவித்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவதை பெருமிதத்துடன் தங்கள் வாழ்த்துரையில் குறிப்பிட்டு பேசினர்.  இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களின் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து தங்கள் மனதில் அலைமோதும் எண்ணங்களை வெளிப்படுத்தி புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். செயற்குழு உறுப்பினர்கள் ரேகா, கற்பகம், சிவக்குமார், சுரேஷ், சலீம், கார்த்தி, கண்ணன், முத்து உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தனர்.

காவலர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்க வலியுறுத்தி ஜனநாயக இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்

  திருவண்ணாமலை மார்கெட்டிற்கு காய்கறிகள் ஏற்றி வந்த ஆந்திர மாநில லோடு வாகனத்தில் வந்த பெண்களை சோதனை என்ற பெயரில் பாலியல் வண்புனர்வு செய்த கிழக்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர்களான சுந்தர், சுரேஷ்ராஜா ஆகிய இருவரையும் கண்டித்து ஜனநாயக இயக்கங்களின் ஒருங்கிணைப்பில் ஏராளமானோர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் காமராஜர் சிலை அருகே நடைபெற்றது. தலித் விடுதலை இயக்கம் மாநில பொதுச் செயலாளர் தோழர் தலித் நதியா ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவலர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்க வேண்டும், குற்றம் செய்யும் காவலர்களை சக காவலர்கள் பாதுகாக்கக் கூடாது எனவும், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் அதிகாரிகளின் பணியை நிரந்தரமாக நீக்க சட்டம் இயற்ற வேண்டும், உழைக்கும் மக்களின் குரலாக செயல்படும் ஆட்சியில் இல்லாத ஜனநாயக இயக்கங்கள், கட்சிகள், அமைப்புகளுக்கு உரிய மதிப்பும், பாதுகாப்பும் வழங்குவது அரசு நிர்வாகம் மற்றும் காவல்துறையின் கடைமை எனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுப்பதையும் கண்டித்து ...