Skip to main content

பாரதீய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் கண்டன ஆர்பாட்டம்

 திருவண்ணாமலை  மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இடை தரகர்களின் மூலம் நெல் கொள்முதல் செய்யப்படுவதை கண்டித்து பாரதீய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் உண்மையான விவசாயிகளிடம் முறையாக  நெல் கொள்முதல் செய்யாமல், பெரிய  நெல் வியாபாரிகள் மூலமாக நெல்  கொள்முதல் செய்து  வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்படும்  கொள்முதல் நிலைய  ஊழியர்கள் நடக்கும் போக்கை  கண்டித்தும்,விவசாயிகளிடம் ஒரு மூட்டைக்கு 60  ரூபாய் முதல் 100 ரூபாய் வரை வசூல் செய்யும்  ஊழியர்களை கண்டித்தும் திருவண்ணாமலை தெற்கு பாஜக சார்பில்

இன்று காலை நாயுடுமங்கலம் கூட் ரோடு சந்திப்பில் பாஜக விவசாய அணி மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

 பாரதீய ஜனதா கட்சியின் விவசாய அணி மாநில தலைவர்  G.K.நாகராஜன் மற்றும்  விவசாய அணி மாநில செயலாளர் ராஜேஷ் குருசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்கள். 

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் R.ஜீவானந்தம்,மாவட்ட பார்வையாளர் மற்றும் மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜன்,  


திருவண்ணாமலை  மாவட்டம் துரிஞ்சாபுரம் பகுதியில் உள்ள 8 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யாமல் ஆளும் கட்சியை சேர்ந்த இடைத்தரகர்களை வைத்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. விவசாயிகளிடம் ஒரு கிலோவிற்கு 1.50 காசு வீதம் மூட்டைக்கு 60 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை வசூல் செய்கிறார்கள்.

மத்திய அரசு நெல்லுக்கு ஒரு கிலோவிற்கு 19 ரூபாய் வழங்குகிறது, ஆனால் மாநில அரசு அதைக்கூட விவசாயிகளுக்கு வழங்குவதில்லை, இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் தெரிவிக்க உள்ளோம், அதையும் தொடர்ந்து இதே நிலை நீடித்தால் பாரதீய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.

இந்த ஆர்பாட்டத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் S.P.K.சுப்பிரமணியன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் சதீஷ், ரமேஷ், மாவட்ட துணைத்தலைவர் முருகன், மாவட்ட இளைஞர் அணி பொதுச்செயலாளர் சந்தோஷ் பரமசிவம், 

மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் பிரபாகரன்,நகர தலைவர் திருமாறன், பொருளாளர் சரவணன், ஓபிசி அணி பொதுச் செயலாளர் ஸ்ரீதரன், மாவட்ட எஸ்.டி அணித்தலைவர் பழனி, துரிஞ்சாபுரம் மேற்கு ஒன்றிய தலைவர் பழனி,  பொதுச் செயலாளர்கள், மணிகண்டன், சக்திவேல், யுவராஜன், 

மாவட்ட வர்த்தக அணி செயலாளர் அருணகிரி, அறிவுசார் பிரிவு மாவட்ட துணைத்தலைவர் ரகுநாதன், எஸ்சி அணி ஒன்றியத் தலைவர் ஏழுமலை, மாவட்ட மருத்துவ அணி தலைவர் மருத்துவர் டாக்டர் ராஜா ஹரி கோவிந்தன், 

மாவட்ட செயலாளர்கள், ராஜலட்சுமி, மெட்டில் ராணி,மகளிர் அணி தலைவர் சந்திரா, மலர்கொடி விவசாய அணி ஒன்றிய தலைவர் ஜெயபால், மாவட்ட விவசாய அணி பொதுச் செயலாளர்கள் ஹரிஹரன், அருள், உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Comments

Popular posts from this blog

திருமண அமைப்பாளர்கள் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில் தமிழ் மாநில‌ BMS உடன்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக திரளான சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.  அந்தக் கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் உள்ள இரண்டு இலட்சம் ‌ திருமண அழைப்பாளர்கள் தொழிலை தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் அமைப்புச் சாரா தொழிலாளர்களாக சேர்க்க‌ வேண்டி‌ தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்ய மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.  சமூக பாதுகாப்பு, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை 70 ஆண்டுகால தொழிற்சங்கமான மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ‌BMS‌ ல்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கம் சார்பில் இதுபோன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு அளிக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில், மாநிலத்...

எம்.எல்.ஏ உத்தரவிட்ட பிறகும் உள்ளூர் திமுக பிரமுகர்களின் தூண்டுதலால் பாதை வசதி ஏற்படுத்தி தராத அதிகாரிகளால் 2 கிலோமீட்டர் சுற்றி செல்லும் அவலம், பாதையை திறக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என கிராம மக்கள் எச்சரிக்கை

  திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், வாழவச்சனூர் கிராமம் காளியம்மன் கோயில் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக அமைத்து வரும் நிலையில் ஆக்கிரமிப்பு  அகற்றப்பட்டு அங்கிருந்த வீடுகள் அகற்றப்பட்டு தற்போது சாலை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது காளியம்மன் கோவில் தெரு 50 குடும்பத்தினை சேர்ந்தவர்களும் பொது பாதை ஏற்படுத்தி தரக்கோரி செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி நேரில் வந்து பார்வையிட்டு பொதுபாதை அமைத்து தர தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் உத்தரவிட்டு சென்றார். இருப்பினும் உள்ளூரில் உள்ள திமுக பிரமுகரின் தூண்டுதலால் ஒருவர் அந்தப் பாதையை ஆக்கிரமிப்பு செய்து தகர சீட் போட்டு அடைத்து மூடிவிட்டார். இதனால் காளியம்மன் கோவில் தெரு ஐம்பது குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பொது வழியில்லாமல் இரண்டு கிலோமீட்டர் சுற்றி தான் தங்கள் சொந்த வீடுகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  அதுமட்டுமில்லாமல் பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர் தங்கள் வீடுகளுக்கு செல்வதற்க...

34 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் மீண்டும் ஒன்றிணைந்த சுவாரஸ்ய நிகழ்ச்சி

  திருவண்ணாமலை வி.டி.எஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் (1986 - 1991) ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் 34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் பழைய நினைவுகளை திரும்பிப் பார்க்கும் அற்புத நிகழ்வாக சிறப்பான முறையில் நடைபெற்றது.  தாங்கள் பயின்றபோது பாடம் எடுத்த இருபால் ஆசிரியர்களை நிகழ்ச்சியில் சிறப்பான வரவேற்பு அளித்து கௌரவித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தாங்கள் பயிற்றுவித்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவதை பெருமிதத்துடன் தங்கள் வாழ்த்துரையில் குறிப்பிட்டு பேசினர்.  இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களின் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து தங்கள் மனதில் அலைமோதும் எண்ணங்களை வெளிப்படுத்தி புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். செயற்குழு உறுப்பினர்கள் ரேகா, கற்பகம், சிவக்குமார், சுரேஷ், சலீம், கார்த்தி, கண்ணன், முத்து உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தனர்.