Skip to main content

மாற்றுத்திறனாளி ராமசாமி குடும்பத்தினரை கொலைவெறியுடன் தாக்கி நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச விடாமல் பயிரை நாசம் செய்து மின்மோட்டார் உடைத்த பன்னீர்செல்வம் கூட்டாளிகள்.

 திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் தொண்டமானூர் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ராமசாமி குடும்பத்தினரை கொலைவெறியுடன் தாக்கி நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச விடாமல் பயிரை நாசம் செய்து மின்மோட்டார் உடைத்த பன்னீர்செல்வம் கூட்டாளிகள். மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுத்து பாதுகாப்பு வழங்காவிட்டால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளவுள்ளதாக கண்ணீருடன் மனு.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் தொண்டமானூர் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ராமசாமி நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச விடாமல் பயிரை நாசம் செய்து மின்மோட்டார் உடைத்துவிட்டு அவரது குடும்பத்தினரை தாக்கி கொலை மிரட்டல் விடுக்கும் பன்னீர்செல்வம். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உரிய பாதுகாப்பு வழங்க கோரி மனு அளித்தனர்.


திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் தொண்டமானூர் கிராமத்தில் மாற்றுத்திறனாளி ராமசாமி தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

மாற்றுத்திறனாளி ராமசாமி அவர்களுக்கு மனநிலை பாதிக்கப்பட்ட மனைவியும் மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

தொண்டமானூர் கிராமத்தில் ராமசாமி அவர்களுக்கு சொந்தமான நிலம் உள்ளது அந்த நிலத்தில் பயிர் செய்து வாழ்ந்து வருகிறார்.


பக்கத்து நிலத்தை சேர்ந்த தொப்புளாண் மகன் பன்னீர்செல்வம், பரசுராமன், அஜித்குமார், தயாளன், மல்லிகா, ஏழுமலை சக்திவேல் உள்ளிட்டோர் மாற்றுத்திறனாளி ராமசாமி மற்றும் அவரது குடும்பத்தினரை காழ்ப்புணர்ச்சி காரணமாக அடிக்கடி கடந்த ஆறு மாத காலமாக தகராறில் ஈடுபட்டு மாற்றுத்திறனாளி ராமசாமியை பலமுறை தாக்கியுள்ளனர்.

இதனை வீடியோ எடுத்த அவரது மகன் மற்றும் மகள் களையும் கொலை மிரட்டல் விடுத்து செல்போனை உடைத்து அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுமட்டுமல்லாமல் அவரது கிணற்றில் உள்ள மின் மோட்டார் பைப் லைன் மாட்டுக் கொட்டகை உள்ளிட்டவற்றையும் உடைத்து அவரது குடும்பத்தினர் வாழ வழி இல்லாத வகையில் அவரை துன்புறுத்தி வருகின்றனர்.


இதுகுறித்து வாணாபுரம் காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் காவல்துறையினர் ஊர் பொதுமக்கள் பஞ்சாயத்துப் பேசி கொள்ளுமாறு தெரிவித்தனர்.


காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.


எனவே எனது குடும்பம் மற்றும் என் உயிரின் பாதுகாப்புக்காக திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் பாதுகாப்பு கேட்டு புகார் மனு கொடுத்துள்ளோம்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து எனது குடும்பத்தாருக்கும் எனக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளனர் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் முன்பு தீக்குளித்து குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளவுள்ளதாக கண்ணீர் மல்க வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

திருமண அமைப்பாளர்கள் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில் தமிழ் மாநில‌ BMS உடன்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக திரளான சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.  அந்தக் கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் உள்ள இரண்டு இலட்சம் ‌ திருமண அழைப்பாளர்கள் தொழிலை தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் அமைப்புச் சாரா தொழிலாளர்களாக சேர்க்க‌ வேண்டி‌ தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்ய மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.  சமூக பாதுகாப்பு, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை 70 ஆண்டுகால தொழிற்சங்கமான மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ‌BMS‌ ல்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கம் சார்பில் இதுபோன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு அளிக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில், மாநிலத்...

34 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் மீண்டும் ஒன்றிணைந்த சுவாரஸ்ய நிகழ்ச்சி

  திருவண்ணாமலை வி.டி.எஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் (1986 - 1991) ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் 34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் பழைய நினைவுகளை திரும்பிப் பார்க்கும் அற்புத நிகழ்வாக சிறப்பான முறையில் நடைபெற்றது.  தாங்கள் பயின்றபோது பாடம் எடுத்த இருபால் ஆசிரியர்களை நிகழ்ச்சியில் சிறப்பான வரவேற்பு அளித்து கௌரவித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தாங்கள் பயிற்றுவித்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவதை பெருமிதத்துடன் தங்கள் வாழ்த்துரையில் குறிப்பிட்டு பேசினர்.  இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களின் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து தங்கள் மனதில் அலைமோதும் எண்ணங்களை வெளிப்படுத்தி புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். செயற்குழு உறுப்பினர்கள் ரேகா, கற்பகம், சிவக்குமார், சுரேஷ், சலீம், கார்த்தி, கண்ணன், முத்து உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தனர்.

காவலர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்க வலியுறுத்தி ஜனநாயக இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்

  திருவண்ணாமலை மார்கெட்டிற்கு காய்கறிகள் ஏற்றி வந்த ஆந்திர மாநில லோடு வாகனத்தில் வந்த பெண்களை சோதனை என்ற பெயரில் பாலியல் வண்புனர்வு செய்த கிழக்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர்களான சுந்தர், சுரேஷ்ராஜா ஆகிய இருவரையும் கண்டித்து ஜனநாயக இயக்கங்களின் ஒருங்கிணைப்பில் ஏராளமானோர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் காமராஜர் சிலை அருகே நடைபெற்றது. தலித் விடுதலை இயக்கம் மாநில பொதுச் செயலாளர் தோழர் தலித் நதியா ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவலர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்க வேண்டும், குற்றம் செய்யும் காவலர்களை சக காவலர்கள் பாதுகாக்கக் கூடாது எனவும், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் அதிகாரிகளின் பணியை நிரந்தரமாக நீக்க சட்டம் இயற்ற வேண்டும், உழைக்கும் மக்களின் குரலாக செயல்படும் ஆட்சியில் இல்லாத ஜனநாயக இயக்கங்கள், கட்சிகள், அமைப்புகளுக்கு உரிய மதிப்பும், பாதுகாப்பும் வழங்குவது அரசு நிர்வாகம் மற்றும் காவல்துறையின் கடைமை எனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுப்பதையும் கண்டித்து ...