Skip to main content

Posts

Showing posts from May, 2022

பாரதீய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் கண்டன ஆர்பாட்டம்

 திருவண்ணாமலை  மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இடை தரகர்களின் மூலம் நெல் கொள்முதல் செய்யப்படுவதை கண்டித்து பாரதீய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் உண்மையான விவசாயிகளிடம் முறையாக  நெல் கொள்முதல் செய்யாமல், பெரிய  நெல் வியாபாரிகள் மூலமாக நெல்  கொள்முதல் செய்து  வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்படும்  கொள்முதல் நிலைய  ஊழியர்கள் நடக்கும் போக்கை  கண்டித்தும்,விவசாயிகளிடம் ஒரு மூட்டைக்கு 60  ரூபாய் முதல் 100 ரூபாய் வரை வசூல் செய்யும்  ஊழியர்களை கண்டித்தும் திருவண்ணாமலை தெற்கு பாஜக சார்பில் இன்று காலை நாயுடுமங்கலம் கூட் ரோடு சந்திப்பில் பாஜக விவசாய அணி மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.  பாரதீய ஜனதா கட்சியின் விவசாய அணி மாநில தலைவர்  G.K.நாகராஜன் மற்றும்  விவசாய அணி மாநில செயலாளர் ராஜேஷ் குருசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்கள்.  திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக தலைவ...

மதம் மாற்ற சுற்றுச்சுவர் பிரச்சனையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மூலம் தீர்வு காணப்படும் என மாவட்டத் தலைவர் ஜீவானந்தம் உறுதி

 மதம் மாற மறுத்தவர்களின் வழியை மறித்து சுற்றுச் சுவர் எழுப்பிய பாதிரியார், நேரில் சென்று ஆய்வு செய்த பாஜக மாவட்டத் தலைவர், பிரச்சனைக்கு தீர்வு காண ஆர்டிஓ தலைமையில் சமாதானப் பேச்சுக்கு ஏற்பாடு திருவண்ணாமலை மாவட்டம் மருத்துவாம்பாடி கிராமத்தில் மதம் மாற மறுத்ததால் பொது வழியை மறித்து சுற்றுச்சுவர் எழுப்புவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் ஆலோசனையின் பெயரில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் R.ஜீவானந்தம் மற்றும் பாஜக குழுவினர் நேரில் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சுற்றுச்சுவர் எழுப்பப்பட்ட இடத்தை ஆய்வு செய்த பின்னர் பொதுமக்களின் கருத்துக்களை மாவட்டத் தலைவர் ஜீவானந்தம் கேட்டறிந்தார். பின்னர் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு பொதுமக்களின் கருத்துக்களையும், கோரிக்கைகளையும் அனுப்பி வைத்து இந்தப் பிரச்சனைக்கு நல்ல தீர்வு ஏற்படுத்தப்படும் என்று பொதுமக்களிடம் நம்பிக்கை தெரிவித்தார்.  இந்த நிலையில் கிறிஸ்தவ மற்றும் இந்து ஆதிதிராவிடர் இருதரப்பினருக்கும் இடையே நடைபாதையில் நடந்து செல்வது சம்பந்தமாக பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது என...

மாற்றுத்திறனாளி ராமசாமி குடும்பத்தினரை கொலைவெறியுடன் தாக்கி நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச விடாமல் பயிரை நாசம் செய்து மின்மோட்டார் உடைத்த பன்னீர்செல்வம் கூட்டாளிகள்.

 திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் தொண்டமானூர் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ராமசாமி குடும்பத்தினரை கொலைவெறியுடன் தாக்கி நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச விடாமல் பயிரை நாசம் செய்து மின்மோட்டார் உடைத்த பன்னீர்செல்வம் கூட்டாளிகள். மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுத்து பாதுகாப்பு வழங்காவிட்டால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளவுள்ளதாக கண்ணீருடன் மனு. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் தொண்டமானூர் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ராமசாமி நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச விடாமல் பயிரை நாசம் செய்து மின்மோட்டார் உடைத்துவிட்டு அவரது குடும்பத்தினரை தாக்கி கொலை மிரட்டல் விடுக்கும் பன்னீர்செல்வம். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உரிய பாதுகாப்பு வழங்க கோரி மனு அளித்தனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் தொண்டமானூர் கிராமத்தில் மாற்றுத்திறனாளி ராமசாமி தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். மாற்றுத்திறனாளி ராமசாமி அவர்களுக்கு மனநிலை பாதிக்கப்பட்ட மனைவியும் மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். தொண்டமானூர்...

சென்னையில் தேசிய பாதுகாப்பு முகமை 7வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

 திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் பாஜக எஸ்சி அணி மாவட்ட தலைவர் விஜயராஜ் அவர்களை RSS இமாலய பரிவார் மாநில செயலாளராக மானீன்ய இந்தரேஷ் குமார் அவர்கள் அறிவித்தார். சென்னையில் தேசிய பாதுகாப்பு முகமை நடத்திய 7வது பொதுக்குழு கூட்டத்தில் ஐநா சபை மூத்த ஆலோசகர் டாக்டர் S.வெங்கட்ராமன் மற்றும் RSS மூத்த தலைவரான மானீன்ய இந்தரேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டு திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் பாஜக எஸ்சி அணி மாவட்ட தலைவர் விஜயராஜ் அவர்களை RSS இமாலய பரிவார் மாநில செயலாளராக மானீன்ய இந்தரேஷ் குமார் அவர்கள் அறிவித்தார். சென்னையில் நடைபெற்ற 7வது பொதுக்குழு கூட்டத்தில் ஐநா சபை மூத்த ஆலோசகர் டாக்டர் எஸ்.வெங்கட்ராமன் மற்றும் ஆர்எஸ்எஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவரான மானீன்ய இந்திரேஷ் குமார் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் பரிவார் இயக்க செயல் வீரர்களுக்கு வழங்கினர். 7வது பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் பரிவார் அமைப்புகள் பொறுப்பாளர்கள் இந்த நிகழ்ச்சியில் புதிதாக அறிவிக்கப்பட்டனர். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக எஸ்சி அணி மாவட...