திருவண்ணாமலை மாவட்டம், கோவூர் கிராமத்தில் நடைபெற்ற வினாயகர் மற்றும் முத்தாலம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகத்தில் துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றிய பாஜக பொதுச்செயலாளர் தங்கராஜ் தலைமையில், சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய தலைவர் குமாரராஜா கலந்துகொண்டு 600க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
திருவண்ணாமலை மாவட்டம், கோவூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு பிள்ளையார் மற்றும் ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றிய பாஜக சார்பாக கோவூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள வினாயகர் மற்றும் முத்தாலம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிசேக திருவிழாவின் போது 600க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு ஒன்றிய பாஜக பொதுச் செயலாளர் தங்கராஜ் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது.
மாபெரும் அன்னதானம் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றிய பாஜக தலைவர் குமாரராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாபெரும் அன்னதான நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
ஒன்றிய துணைத் தலைவர்கள் கோவிந்தராஜி, ராஜேந்திரன், மகளிர் அணி ஒன்றிய செயற்குழு உறுப்பினர் சாந்தி, ஒன்றிய வர்த்தக பிரிவு தலைவர் சங்கர், கோவூர் ஊராட்சிமன்ற தலைவர் ஆறுமுகம்,கிளை செயலாளர் விஜய்,மங்கலம் ஊராட்சிமன்ற தலைவர் ஜீவானந்தம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




Comments
Post a Comment