Skip to main content

பாஜக கொடியேற்றி, நம்ம ஊரு பொங்கல் விழா, துரிஞ்சாபுரம் மேற்கு ஒன்றியத்தில் கோலாகலம்

 திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக, துரிஞ்சாபுரம் மேற்கு ஒன்றியத்தில் நம்ம ஊரு பொங்கல் நிகழ்ச்சியில்  கட்சி கொடி ஏற்றி கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், ஈச்சங்குப்பம் கிராமத்தில், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக துரிஞ்சாபுரம் மேற்கு ஒன்றியம் சார்பாக நம்ம ஊரு பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பாரதிய ஜனதா கட்சியின் கொடி ஏற்றம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

 துரிஞ்சாபுரம் மேற்கு ஒன்றிய பாஜக பொதுச் செயலாளர் மணிகண்டன் நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக மாநில வர்த்தக அணி துணைத் தலைவர் திருநாவுக்கரசு கலந்துகொண்டு பாஜக கொடியை ஏற்றி நம்ம ஊரு பொங்கல்விழா நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார்.ஒன்றிய தலைவர் பழனி வரவேற்று பேசினார்.

மாவட்ட மருத்துவ அணி தலைவர் டாக்டர் ராஜா ஹரி கோவிந்தன் நம்ம ஊரு பொங்கல் விழா குறித்து விளக்க உரை நிகழ்த்தி பொங்கல் விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சேலை வழங்கினார், மாவட்ட மகளிரணி தலைவர் ராஜதமயந்தி நம்ம ஊரு பொங்கல் விழாவில் நடைபெற்ற கோலப்போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிருக்கு சேலை வழங்கி வாழ்த்தினர்.

கோட்ட அமைப்புச் செயலாளர் குணசேகரன், மாவட்ட துணைத் தலைவர் முருகன், மாவட்ட வர்த்தக அணி தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் பிச்சாண்டி,  மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் பிரபாகரன், அறிவுசார் பிரிவு தலைவர் அருணகிரிநாதன், இளைஞர் அணி பொதுச் செயலாளர் சந்தோஷ், மகளிர் அணி துணைத் தலைவர் மெட்டில்ராணி, ஈச்சங்குப்பம் கிளை தலைவர் தங்கவேல், கோவிந்தசாமி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு நம்ம ஊர் பொங்கல் விழா நிகழ்ச்சியை கோலாகலமான முறையில் வெகு விமரிசையாக நடத்தினர்.

Comments

Popular posts from this blog

திருமண அமைப்பாளர்கள் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில் தமிழ் மாநில‌ BMS உடன்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக திரளான சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.  அந்தக் கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் உள்ள இரண்டு இலட்சம் ‌ திருமண அழைப்பாளர்கள் தொழிலை தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் அமைப்புச் சாரா தொழிலாளர்களாக சேர்க்க‌ வேண்டி‌ தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்ய மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.  சமூக பாதுகாப்பு, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை 70 ஆண்டுகால தொழிற்சங்கமான மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ‌BMS‌ ல்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கம் சார்பில் இதுபோன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு அளிக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில், மாநிலத்...

எம்.எல்.ஏ உத்தரவிட்ட பிறகும் உள்ளூர் திமுக பிரமுகர்களின் தூண்டுதலால் பாதை வசதி ஏற்படுத்தி தராத அதிகாரிகளால் 2 கிலோமீட்டர் சுற்றி செல்லும் அவலம், பாதையை திறக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என கிராம மக்கள் எச்சரிக்கை

  திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், வாழவச்சனூர் கிராமம் காளியம்மன் கோயில் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக அமைத்து வரும் நிலையில் ஆக்கிரமிப்பு  அகற்றப்பட்டு அங்கிருந்த வீடுகள் அகற்றப்பட்டு தற்போது சாலை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது காளியம்மன் கோவில் தெரு 50 குடும்பத்தினை சேர்ந்தவர்களும் பொது பாதை ஏற்படுத்தி தரக்கோரி செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி நேரில் வந்து பார்வையிட்டு பொதுபாதை அமைத்து தர தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் உத்தரவிட்டு சென்றார். இருப்பினும் உள்ளூரில் உள்ள திமுக பிரமுகரின் தூண்டுதலால் ஒருவர் அந்தப் பாதையை ஆக்கிரமிப்பு செய்து தகர சீட் போட்டு அடைத்து மூடிவிட்டார். இதனால் காளியம்மன் கோவில் தெரு ஐம்பது குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பொது வழியில்லாமல் இரண்டு கிலோமீட்டர் சுற்றி தான் தங்கள் சொந்த வீடுகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  அதுமட்டுமில்லாமல் பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர் தங்கள் வீடுகளுக்கு செல்வதற்க...

34 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் மீண்டும் ஒன்றிணைந்த சுவாரஸ்ய நிகழ்ச்சி

  திருவண்ணாமலை வி.டி.எஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் (1986 - 1991) ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் 34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் பழைய நினைவுகளை திரும்பிப் பார்க்கும் அற்புத நிகழ்வாக சிறப்பான முறையில் நடைபெற்றது.  தாங்கள் பயின்றபோது பாடம் எடுத்த இருபால் ஆசிரியர்களை நிகழ்ச்சியில் சிறப்பான வரவேற்பு அளித்து கௌரவித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தாங்கள் பயிற்றுவித்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவதை பெருமிதத்துடன் தங்கள் வாழ்த்துரையில் குறிப்பிட்டு பேசினர்.  இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களின் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து தங்கள் மனதில் அலைமோதும் எண்ணங்களை வெளிப்படுத்தி புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். செயற்குழு உறுப்பினர்கள் ரேகா, கற்பகம், சிவக்குமார், சுரேஷ், சலீம், கார்த்தி, கண்ணன், முத்து உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தனர்.