Skip to main content

மனநல காப்பகத்தில் சிகிச்சை பெறுபவர்கள் உற்சாகமாக 73 வந்து குடியரசு தினத்தை கொண்டாடினர்.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள உதவும் கரங்கள் மறுவாழ்வு மையத்தில் 73-வது சுதந்திர தின விழா கொடியேற்றி கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை கிரிவலப்பதையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறும் உதவும் கரங்கள் ரமணா மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது.

அதன் அருகில் சுமைதாங்கி பெண்கள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 50 -க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 தங்களது வாழ்க்கையை பற்றி புரிந்தும்,புரியாமலும் வாழும் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் உதவும் கரங்கள் நிறுவனர் பப்பா வித்யாகர் ஆலோசனையின் பேரில் அங்கு நேற்று 73 -வது குடியரசு தின விழா நடைபெற்றது. 

இதனை முன்னிட்டு ரமணா மறுவாழ்வு மையம் முன்பு மகாத்மா காந்தி படம் அலங்கரித்து வைக்கப்பட்டு தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திருவண்ணாமலை தாலுகா போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். 

அவர் பேசும்போது,

"மனநோயாளிகள் அனைவரும் நலம் பெற வேண்டும் .இந்த நிகழ்ச்சி அவர்கள் மனதை மிகவும் மகிழ்ச்சிப்படுத்தும்" என்று தெரிவித்தார். 

அங்கு குடியரசு தினத்தை நினைவு படுத்தும் வகையில் விழிப்புணர்வு கோலங்கள் வரையப்பட்டிருந்தது. மன நோய்க்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் பலூன்களை கையில் வைத்துக் கொண்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. 

இந்த நிகழ்ச்சியில் சமூக சேவகர் மஞ்சுநாதன், முன்னாள் ராணுவ வீரரும் ,காப்பக நிர்வாகியுமான மணி, சுமைதாங்கி காப்பக நிர்வாகி திரிவேணி, நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வரும் செவிலியர் செண்பகம் மற்றும் சமூக ஆர்வலர்கள் மூர்த்தி ,ஏழுமலை மற்றும் சாமியார்கள் கலந்துகொண்டனர்.ன

Comments

Popular posts from this blog

திருமண அமைப்பாளர்கள் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில் தமிழ் மாநில‌ BMS உடன்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக திரளான சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.  அந்தக் கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் உள்ள இரண்டு இலட்சம் ‌ திருமண அழைப்பாளர்கள் தொழிலை தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் அமைப்புச் சாரா தொழிலாளர்களாக சேர்க்க‌ வேண்டி‌ தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்ய மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.  சமூக பாதுகாப்பு, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை 70 ஆண்டுகால தொழிற்சங்கமான மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ‌BMS‌ ல்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கம் சார்பில் இதுபோன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு அளிக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில், மாநிலத்...

34 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் மீண்டும் ஒன்றிணைந்த சுவாரஸ்ய நிகழ்ச்சி

  திருவண்ணாமலை வி.டி.எஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் (1986 - 1991) ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் 34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் பழைய நினைவுகளை திரும்பிப் பார்க்கும் அற்புத நிகழ்வாக சிறப்பான முறையில் நடைபெற்றது.  தாங்கள் பயின்றபோது பாடம் எடுத்த இருபால் ஆசிரியர்களை நிகழ்ச்சியில் சிறப்பான வரவேற்பு அளித்து கௌரவித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தாங்கள் பயிற்றுவித்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவதை பெருமிதத்துடன் தங்கள் வாழ்த்துரையில் குறிப்பிட்டு பேசினர்.  இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களின் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து தங்கள் மனதில் அலைமோதும் எண்ணங்களை வெளிப்படுத்தி புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். செயற்குழு உறுப்பினர்கள் ரேகா, கற்பகம், சிவக்குமார், சுரேஷ், சலீம், கார்த்தி, கண்ணன், முத்து உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தனர்.

காவலர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்க வலியுறுத்தி ஜனநாயக இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்

  திருவண்ணாமலை மார்கெட்டிற்கு காய்கறிகள் ஏற்றி வந்த ஆந்திர மாநில லோடு வாகனத்தில் வந்த பெண்களை சோதனை என்ற பெயரில் பாலியல் வண்புனர்வு செய்த கிழக்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர்களான சுந்தர், சுரேஷ்ராஜா ஆகிய இருவரையும் கண்டித்து ஜனநாயக இயக்கங்களின் ஒருங்கிணைப்பில் ஏராளமானோர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் காமராஜர் சிலை அருகே நடைபெற்றது. தலித் விடுதலை இயக்கம் மாநில பொதுச் செயலாளர் தோழர் தலித் நதியா ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவலர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்க வேண்டும், குற்றம் செய்யும் காவலர்களை சக காவலர்கள் பாதுகாக்கக் கூடாது எனவும், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் அதிகாரிகளின் பணியை நிரந்தரமாக நீக்க சட்டம் இயற்ற வேண்டும், உழைக்கும் மக்களின் குரலாக செயல்படும் ஆட்சியில் இல்லாத ஜனநாயக இயக்கங்கள், கட்சிகள், அமைப்புகளுக்கு உரிய மதிப்பும், பாதுகாப்பும் வழங்குவது அரசு நிர்வாகம் மற்றும் காவல்துறையின் கடைமை எனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுப்பதையும் கண்டித்து ...