Skip to main content

பக்தர்களின் மனதை புண்படுத்தும் திமுக அரசுக்கு கேடு காலம், கரு.நாகராஜன் பேட்டி.

 ஆன்மீக வழிபாட்டுத் ஸ்தலங்களை வாரம் மூன்று நாட்கள் மூடும் திமுக அரசை கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாஜக மாநில பொது செயலாளர் கரு.நாகராஜன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாஜகவினர் பங்கேற்பு.

திருவண்ணாமலை நகரின் அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலின் நான்கு மாட வீதியில் உள்ள திருவூடல் தெருவில் பாஜக மாநில பொது செயலாளர் கரு.நாகராஜன் தலைமையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை தங்குதடையின்றி திறந்துவைத்து மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வரும் ஆன்மீக விரோத திமுக அரசு கொரோனா பரவலைக் காரணம் காட்டி வார விடுமுறை நாட்களில் வழிபாட்டுத் ஸ்தளங்களில் தரிசனம் செய்வதற்கு தடை விதித்துள்ளதை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுது,

 கண்டன ஆர்ப்பாட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்துகொண்டு திமுக -வை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

ஆன்மீக விரோத போக்கை கடைபிடிக்கும் திமுக அரசை கண்டித்து பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் அவர்கள் பேசுகையில், தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் திருவண்ணாமலை நகரில் உள்ள உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவிலில் வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் மூடுவதற்கு உத்தரவிட்டு பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்காமல் கோவிலை மூடி வைத்து விட்டு கரோனா நோய் தொற்று பரவலை காரணம் காட்டி டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து விற்பனை செய்து வருவது கண்டனத்துக்குரியது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேட்டி அளித்த கரு.நாகராஜன் கூறுகையில், இந்து கோயில்கள் மட்டுமல்லாமல் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து சமூகத்தினரின் ஆலயங்களையும் திறக்க வேண்டும் என்றும், அதே போன்று தமிழகத்தில் அனைத்து துறைகலும் தற்போது இயங்கிவரும் நிலையில், இந்து கோயில்களை மட்டும் வாரத்தில் மூன்று நாள் மூடுவது இந்துக்களின் உரிமையை திமுக அரசு பரிப்பதாகவும், ஏசி பஸ்ஸில் 50 பேர் செல்லும் போது கரோனா நோய் தொற்று பரவாதா? என்றும், திமுக அரசு கோயில்களை மூடுவதில் மட்டும் பிடிவாதம் பிடிக்கக் கூடாது என்றார்.

மேலும் தமிழகத்தில் குற்றங்களை தடுத்து சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதற்கு பிடிவாதம் பிடிக்க வேண்டிய அரசு கோயில்களை மூடுவதற்கு பிடிவாதம் செய்யக்கூடாது.  பக்தர்களின் மனவேதனையை புண்படுத்தும் திமுக அரசுக்கு கேடு காலம் என்று காட்டமாக தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

திருமண அமைப்பாளர்கள் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில் தமிழ் மாநில‌ BMS உடன்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக திரளான சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.  அந்தக் கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் உள்ள இரண்டு இலட்சம் ‌ திருமண அழைப்பாளர்கள் தொழிலை தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் அமைப்புச் சாரா தொழிலாளர்களாக சேர்க்க‌ வேண்டி‌ தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்ய மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.  சமூக பாதுகாப்பு, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை 70 ஆண்டுகால தொழிற்சங்கமான மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ‌BMS‌ ல்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கம் சார்பில் இதுபோன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு அளிக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில், மாநிலத்...

எம்.எல்.ஏ உத்தரவிட்ட பிறகும் உள்ளூர் திமுக பிரமுகர்களின் தூண்டுதலால் பாதை வசதி ஏற்படுத்தி தராத அதிகாரிகளால் 2 கிலோமீட்டர் சுற்றி செல்லும் அவலம், பாதையை திறக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என கிராம மக்கள் எச்சரிக்கை

  திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், வாழவச்சனூர் கிராமம் காளியம்மன் கோயில் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக அமைத்து வரும் நிலையில் ஆக்கிரமிப்பு  அகற்றப்பட்டு அங்கிருந்த வீடுகள் அகற்றப்பட்டு தற்போது சாலை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது காளியம்மன் கோவில் தெரு 50 குடும்பத்தினை சேர்ந்தவர்களும் பொது பாதை ஏற்படுத்தி தரக்கோரி செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி நேரில் வந்து பார்வையிட்டு பொதுபாதை அமைத்து தர தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் உத்தரவிட்டு சென்றார். இருப்பினும் உள்ளூரில் உள்ள திமுக பிரமுகரின் தூண்டுதலால் ஒருவர் அந்தப் பாதையை ஆக்கிரமிப்பு செய்து தகர சீட் போட்டு அடைத்து மூடிவிட்டார். இதனால் காளியம்மன் கோவில் தெரு ஐம்பது குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பொது வழியில்லாமல் இரண்டு கிலோமீட்டர் சுற்றி தான் தங்கள் சொந்த வீடுகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  அதுமட்டுமில்லாமல் பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர் தங்கள் வீடுகளுக்கு செல்வதற்க...

34 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் மீண்டும் ஒன்றிணைந்த சுவாரஸ்ய நிகழ்ச்சி

  திருவண்ணாமலை வி.டி.எஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் (1986 - 1991) ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் 34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் பழைய நினைவுகளை திரும்பிப் பார்க்கும் அற்புத நிகழ்வாக சிறப்பான முறையில் நடைபெற்றது.  தாங்கள் பயின்றபோது பாடம் எடுத்த இருபால் ஆசிரியர்களை நிகழ்ச்சியில் சிறப்பான வரவேற்பு அளித்து கௌரவித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தாங்கள் பயிற்றுவித்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவதை பெருமிதத்துடன் தங்கள் வாழ்த்துரையில் குறிப்பிட்டு பேசினர்.  இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களின் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து தங்கள் மனதில் அலைமோதும் எண்ணங்களை வெளிப்படுத்தி புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். செயற்குழு உறுப்பினர்கள் ரேகா, கற்பகம், சிவக்குமார், சுரேஷ், சலீம், கார்த்தி, கண்ணன், முத்து உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தனர்.