செல்போன் கடையில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள உபகரணம் திருடிய 3 குற்றவாளிகள், போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தி.மலை மாவட்டம், ஆரணி மார்க்கெட் ரோட்டிலுள்ள தனியார் காம்பளக்ஸில் ராஜஸ்தான் மாநிலச் சேர்ந்த தீப்சிங் என்பவர் செல்போன் உதிரிப் பாகங்கள் விற்பனை கடையை நடத்தி வருகின்றார்.
கடந்த 8ம் தேதியன்று இரவு கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த செல்போன் உபகரணங்கள் உள்ளிட்ட ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து ஆரணி நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படையை திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் உத்தரவின் பேரில் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன் மேற்பார்வையில்¸ ஆரணி இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் தலைமையில் அமைக்கப்பட்டு அதி தீவிரமாக தேடினர்.
மேலும் கொள்ளையடிக்கப்பட்ட இடத்திலுள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆராய்ந்தும்¸ சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் ஆற்காடு மகாலட்சுமி கல்லூரி பேருந்து நிலையத்தின் அருகில் கொள்ளையர்கள் இருப்பது தெரிய வந்தது. அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் குற்றவாளிகளை சுற்றி வளைத்து கைது செய்ததில் விக்ரம் சிங்(34), ராகுல் சிங் (30), ஜாலம்சிங் ரத்தோர் (27) ஆகிய மூன்று நபர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்களிடமிருந்து 525 மொபைல் காம்போ எல்.இ.டி¸ 1100 மொபைல் டச் ஸ்கிரின் மற்றும் 30 மொபைல் டிஸ்பிளே ஆகியவைகள் கைப்பற்றி, ஆரணி நீதிமன்றத்தில் மூன்று பேரை ஆஜர் படுத்தப்பட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதேபோல மற்றொரு செல்போன் கடையில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அடுத்தடுத்து வாரங்களில் நிகழ்ந்தால் பொதுமக்கள், வியாபாரிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
Comments
Post a Comment