Skip to main content

Posts

Showing posts from March, 2025

27 ஆண்டுகளுக்குப் பிறகு அருள்மிகு ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலய மகாபாரத சொற்பொழிவு மற்றும் துரியோதனன் படுகளம் வெகு விமரிசையாக நடைபெற்றது, ஆயிரக்கணக்கான பக்தர்கள்யை சுவாமி தரிசனம் செய்து வழிபாடு.

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், கூத்தலவாடி கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய  மகாபாரத சொற்பொழிவு கடந்த 18 நாட்களாக நடைபெற்று வந்தது. இதில் இன்று காலை துரியோதனன் படுகளம் வெகு விமரிசையாக நடைபெற்றது.  கடந்த 18 நாட்களாக பாண்டவர் கௌரவர் பிறந்த வரலாறு, தகாதன செய்த பகாசுரன் வதம், கிருஷ்ணன் தூது, அபிமன்யு செய்த அசகாய போர் என்கின்ற பல்வேறு தலைப்புகளில் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்றது. கடந்த 7 நாட்களாக இரவுகளில் அர்ஜுனன் வில்வளைப்பு, ராஜ சுய யாகம், கர்ணன் மோட்சம், பதினெட்டாம் போர் உள்ளிட்ட தெருக்கூத்து நாடகமும் 7 நாட்கள் இரவில் நடைபெற்று வந்தது. மேலும் பகலில் மகா பாரத சொற்பொழிவு மற்றும் இரவு நேரங்களில் மகாபாரத கதையில் வரும் தெருக்கூத்து நாடகங்கள் என தினந்தோறும் விழா நடைபெற்று வந்தது. இரவு நேரங்களில் சாமி வீதி உலா வந்து திரௌபதி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்று வந்தது. மேலும் அக்னி வசந்த விழாவின் முக்கிய நாளான இன்று 18ம் நாளை முன்னிட்டு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து பாஞ்சாலி சபதம் நிகழ்வையும் துரியோதனனை வதம் ...

27 ஆண்டுகளுக்குப் பிறகு அருள்மிகு ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலய மகாபாரத சொற்பொழிவு மற்றும் துரியோதனன் படுகளம் வெகு விமரிசையாக நடைபெற்றது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபாடு.

  திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், கூத்தலவாடி கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய  மகாபாரத சொற்பொழிவு கடந்த 18 நாட்களாக நடைபெற்று வந்தது. இதில் இன்று காலை துரியோதனன் படுகளம் வெகு விமரிசையாக நடைபெற்றது.  கடந்த 18 நாட்களாக பாண்டவர் கௌரவர் பிறந்த வரலாறு, தகாதன செய்த பகாசுரன் வதம், கிருஷ்ணன் தூது, அபிமன்யு செய்த அசகாய போர் என்கின்ற பல்வேறு தலைப்புகளில் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்றது. கடந்த 7 நாட்களாக இரவுகளில் அர்ஜுனன் வில்வளைப்பு, ராஜ சுய யாகம், கர்ணன் மோட்சம், பதினெட்டாம் போர் உள்ளிட்ட தெருக்கூத்து நாடகமும் 7 நாட்கள் இரவில் நடைபெற்று வந்தது. மேலும் பகலில் மகா பாரத சொற்பொழிவு மற்றும் இரவு நேரங்களில் மகாபாரத கதையில் வரும் தெருக்கூத்து நாடகங்கள் என தினந்தோறும் விழா நடைபெற்று வந்தது. இரவு நேரங்களில் சாமி வீதி உலா வந்து திரௌபதி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்று வந்தது. மேலும் அக்னி வசந்த விழாவின் முக்கிய நாளான இன்று 18ம் நாளை முன்னிட்டு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து பாஞ்சாலி சபதம் நிகழ்வையும் துரியோதனன...

10 மாணவர்களுக்கு கராத்தே பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா

திருவண்ணாமலை நகரில் செயல்பட்டு வரும் ஶ்ரீ சாய் வித்யாஷ்ரம் மழலையர் மற்றும் தொடக்க பள்ளியில் ஜப்பான் ஷிட்டோ ரியூ கராத்தே பயிற்சி பள்ளியின் கராத்தே பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளர் எஸ்.செங்குட்டுவன் தலைமை தாங்கினார். கராத்தே பயிற்சி பெற்ற 10 மாணவர்களுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ்களை பள்ளித் தாளாளர் எஸ்.செங்குட்டுவன் வழங்கி மாணவர்களை வாழ்த்தினார்.  அகில இந்திய தலைவர் (JSKDI) கியோஷி A.ரமேஷ் பாபு சான்றிதழ் மற்றும் கராத்தே பெல்ட் வாங்கிய கராத்தே மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். கராத்தே சங்க மாவட்ட தலைவர், கராத்தே பயிற்சியாளர் ஷீகான் சரவணன்.ச MBA, MTech பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழாவில் உடன் இருந்தார்.

பட்டாசு வெடித்து மேல தாளங்கள் முழங்க சிவன், காளி உள்ளிட்ட வேடம அணிந்து நடனம் ஆடிய படி மயானம் கொள்ளை உற்சவம் கோலாகலம்

  திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டம், பெரியகல்லந்தல் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் மகா சிவராத்திரி உற்சவம் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மகா சிவராத்திரி உற்சவ திருவிழா தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பிரம்மன் சிரசுகளுக்கு கண் திறக்கப்பட்டு ஏராளமான பக்தர்கள் மயான கொள்ளை விடுவதற்கு பட்டாசு வெடித்து, மேல தாளங்கள் முழங்க, சிவன் காளி உள்ளிட்ட வேடமணிந்து நடனம் ஆடிய படி திரளான பக்தர்களும் மயானம் சென்றனர். அங்கு மயான கொள்ளை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற வேண்டி பக்தர்கள் பொங்கல் வைத்து, முடி காணிக்கை செலுத்தி அம்மனை வேண்டினர்.   குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நோய்வாய்ப்பட்டு துன்பப்படுபவர்கள், பில்லி சூனியம் பேய் பிசாசு உள்ளிட்டவற்றால் அவதிப்படுபவர்கள், குடும்ப பிரச்சினைகளில் உள்ளவர்கள் தங்கள் பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதற்கு அங்காள பரமேஸ்வரி அம்மனை தரிசித்து வழிபட்டு வேண்டினால் அனைத்து பிரச்சினைகளும் தீரும் என்பது இந்த கோயிலின் சிறப்பு அம்சமாகும் எ...