Skip to main content

Posts

Showing posts from January, 2025

தனது 48 வது பிறந்தநாளை அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடிய மாநகராட்சி உறுப்பினர் B.சந்திரபிரகாஷ் MC

  திருவண்ணாமலை மாநகராட்சியின் 16வது வார்டு அதிமுக வட்டக் கழகச் செயலாளரும், திருவண்ணாமலை மாநகராட்சி நகர மன்ற உறுப்பினருமான பி. சந்திரபிரகாஷ் MC அவர்களின் 48வது பிறந்தநாள் விழா இன்று பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கி சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் ராஜகோபுரம் அருகே உள்ள ஸ்ரீ தேரடி முனீஸ்வரன் கோயில் முன்பு ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு இனிப்பு கேசரி, வெஜிடபிள் சாதம், சிப்ஸ் மற்றும் வாட்டர் பாட்டில் உள்ளிட்டவை அன்னதானம் வழங்கப்பட்டது. வேட்டி, சட்டை, சேலை, தாம்பூல தட்டு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் ஸ்ரீ தேரடி முனீஸ்வரர் கோயில் முன்பு ஏராளமான பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  அதனை அடுத்து மதியம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள புறநோயாளிகள் மற்றும் பொதுமக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானமும் வழங்கி பிறந்தநாள் விழா சிறப்பான முறையில் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக கொண்டாடப்பட்டது.

பெரியாரை இழிவுபடுத்தும் சீமானை கைது செய்ய வலியுறுத்தி புரட்சிகர இளைஞர் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

  திருவண்ணாமலை நகரின் காமராஜர் சிலை அருகே புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் தந்தை பெரியாரை இழிவு படுத்தி பேசி வரும் சங்கி சீமானை கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வெற்றி தலைமை தாங்கினார். பரணி வரவேற்புரை நிகழ்த்தினார். தந்தை பெரியாரை இழிவுபடுத்தி பேசி வரும் சங்கி சீமானை கைது செய்ய வலியுறுத்தி புரட்சிகர இளைஞர் முன்னணியினர் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆர்ப்பாட்டத்தில் இந்திய பொதுவுடமை கட்சியின் தங்கராஜ் , திராவிடர் கழகம் பழனி, பன்னீர்செல்வம், தோழர்கள் பசுமைச்செல்வன், சந்திரசேகரன், வழக்கறிஞர் நேரு உள்ளிட்ட பலர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு சீமானை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.   அவதூறு பேசுவதற்காகவே ஆரிய கைக்கூலியான சங்கி சீமானுக்கு ஆதரவாக பாஜகவை சேர்ந்த தமிழிசை, மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் ஆதரவு தெரிவிப்பதால் சீமானை அவர்கள் தான் பெரியாரை இழிவுபடுத்த பயன்படுத்துகின்றனர் என்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள் கூறினர்.

நீதியரசர் ஆணைப்படி மின்சார தொழிலாளர் சம்மேளன பொதுக்குழு கூட்டத்தில் புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

  திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளனம் திருவண்ணாமலை வட்டக் கிளையின் பொதுக்குழு கூட்டம் வட்டத் தலைவர் எஸ்.சக்திவேல் தலைமையில் நடைபெற்றது. ஓய்வு பெற்ற நீதியரசர் ஜி.சொக்கலிங்கம் ஆணைப்படி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவராக மீண்டும் எஸ்.சக்திவேல், வட்டச் செயலாளராக கே.சம்பத், பொருளாளராக கே.தட்சிணாமூர்த்தி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் வட்டத் உப தலைவர்கள் மற்றும் வட்ட இணை செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியல் நீதியரசருக்கு அனுப்பி வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் திருவண்ணாமலை கிழக்கு, மேற்கு ஆரணி, போளூர், செய்யாறு, வந்தவாசி, செங்கம், ஜமுனாமரத்தூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு கோட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட திரளான மின்சார சம்மேளன தொழிலாளர்கள் கலந்து கொண்டு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்களை வாழ்த்தி பேசினர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் முதலாம் ஆண்டு உள்ளூர் கமிட்டி மாநாடு

  திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை வட்டம் திருவண்ணாமலை ஒன்றியம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனின் லிஸ்ட் கட்சியின் முதலாம் ஆண்டு உள்ளூர் கமிட்டி மாநாடு திருவண்ணாமலை அடுத்த அடியண்ணாமலை கிராமத்தில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சங்கர் மாநாட்டிற்கு தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில குழு உறுப்பினர் ஐயன்துறை , மாவட்டச் செயலாளர் எம்.ஆறுமுகம், கட்சியின் வழக்கறிஞர் வி.நடராஜன், சத்தியமூர்த்தி மற்றும் மாவட்ட குழு நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  முன்னதாக கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட பேரணி அடி அண்ணாமலை கிராமத்தின் மாணிக்கவாசகர் கோயிலில் துவங்கி அருணாச்சலேஸ்வரர் கோயில் வரை முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. எம்.ஆறுமுகம், சங்கர், நாராயணன், செல்வகுமார், செல்வகணேஷ், முருகன், அண்ணாமலை, சந்திரசேகர், விஜயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உள்ளூர் கமிட்டி பொறுப்பாளர்களாக மாநாட்டில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  இந்த ஒன்பது பொறுப்பாளர்களும் இணைந்து ஒன்றிய செயலாளர் சங்கரை ஒருமனதாக தேர்வு செய்தனர்.  சோ.கீழ்நாச்சிபட்டு கிராமத்...