Skip to main content

Posts

Showing posts from April, 2024

வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த எஸ்ஐ, புகார் மனுவுக்கு நடவடிக்கை எடுக்காததால் காவல் நிலையம் முற்றுகை

  திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் மத்தளாங்குள தெருவில் வசித்து வரும் மகாலிங்கம் என்ற வழக்கறிஞர் மீது கொலை மிரட்டல் விடுத்த ஓய்வு பெற்ற எஸ்ஐ தனபால் குறித்து புகார் மனு அளித்தும் குற்றச்சாட்டப் பட்டவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த 40க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கிழக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மத்தளாங்குள தெருவில் வசித்து வரும் வழக்கறிஞர் மகாலிங்கம் ஓய்வு பெற்ற எஸ் ஐ தனபால் என்பவர் மாதவி என்பவர் மீது தொடுத்த வழக்கிற்கு எதிராக வாதாடி வருகிறார் இதனால் அந்த வழக்கில் ஓய்வு பெற்ற எஸ்ஐ தோல்வி அடையும் சாத்திய கூறுகள் அதிகமாக இருப்பதால் வழக்கறிஞர் மகாலிங்கத்திற்கு மிரட்டல் கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்து அந்த வழக்கிலிருந்து விலகிக் கொள்ளுமாறு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கறிஞர் மகாலிங்கம் அளித்த புகாருக்கு காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் 40க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வழக்கறிஞர்களுக்கு பாது...

202ம் ஆண்டு கூத்தாண்டவர் தேர் திருவிழா, 33 அடி உயரம் கொண்ட தேறினை கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி பரவசத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

  திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், வேடந்தவாடி கிராமத்தில் அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ கூத்தாண்டவர் கோயில் 202 ஆம் ஆண்டு தேர் திருவிழாவை முன்னிட்டு மகாபாரத விரிவுரை நிகழ்ச்சி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் 20 நாட்களாக நடைபெற்று வந்தது. கூத்தாண்டவர் தேர் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கூத்தாண்டவர் ரத தேரோட்டம் இன்று நடைபெற்றது. 33 அடி உயரம் கொண்ட கூத்தாண்டவர் தேறினை கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி பரவசத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். முன்னதாக அருள்மிகு ஸ்ரீ கூத்தாண்டவருக்கு இன்று காலை பூஜை மற்றும் யாகம் நடைபெற்றது. மும்பை, சென்னை, திருவண்ணாமலை, மேல்மலையனூர் பகுதிகளில் இருந்து வந்துள்ள திருநங்கைகள் குழுவினர் மற்றும் வேடந்தவாடி அருக்கார் குடும்பத்தார் இணைந்து பெண் அழைப்பு நிகழ்ச்சி மற்றும் கல்யாணமும் நடைபெற்றது. விநாயகர் சிலை கொண்ட தேர் முதலில் செல்ல அதனை அடுத்து ஸ்ரீ கூத்தாண்டவர் ரதம் மற்றும் முத்தாலம்மன் தேர் உள்ளிட்டவை ஒன்றன்பின் ஒன்றாக பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி பரவசத்துடன் தேர் ஊர்வலமாக ...

அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம், திரளான பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்

  திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் மதுரா பாரதி நகர் கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். நேற்று காலை கும்பாபிஷேக நிகழ்வுகள் மங்கள இசை, அனுக்ஞை மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், கோபூஜை, புதிய சிலைகள் கண் திறத்தலுடன் துவங்கியது. பின்னர் மாலை வாஸ்து சாந்தி, பிரவேசபலி, முதற்கால யாக பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு பூர்ணாஹுதி, தீபாராதனை, சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இன்று காலை மங்கள இசையுடன் இரண்டாம் கால யாக பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு சிலைகளுக்கு உயிர் தரப்பட்டு பூர்ணாஹுதியுடன் தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் யாகசாலையில் இருந்து கலசம் புறப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அருள்மிகு ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. அப்போது கூடியிருந்த திரளான பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என்ற பக்தி கோஷம் முழங்...

அருள்மிகு ஸ்ரீ விஜயலட்சுமி ஆனந்த ஆசிரமம் கும்பாபிஷேகம்! காலை மற்றும் மாலையில் தியானம் செய்யும் பக்தர்களுக்கு ஐந்து முகம் கொண்ட ருத்திராட்சை பிரசாதமாக வழங்கப்படும்

  திருவண்ணாமலை நகரில் உள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலின் கிரிவலப் பாதை அடி அண்ணாமலையார் திருக்கோவில் அருகில் உள்ள ஓம் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விஜயலட்சுமி ஆனந்த ஆசிரமம் புதிதாக அமைக்கப்பட்டு சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் யாக சாலை அமைத்து மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர் சென்னை மாவட்டம் சேர்ந்த யோகேஸ்வர் லாஜ்வந்தி இவர்களது தாய் தந்தையார் விஜயலட்சுமி ஆனந்த இவர்கள் கடந்த ஜனவரி மாதம் 2021 ஆம் ஆண்டு இயற்கை மரணம் அடைந்தனர் இவர்களுக்கு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலின் கிரிவல பாதை ஓம் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விஜயலட்சுமி ஆனந்த ஆசிரமம் புதிதாக அமைக்கப்பட்டு நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் முதல் கால யாக பூஜையுடன் தொடங்கி நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜையும், மாலை மூன்றாம் கால யாக பூஜையும் நடைபெற்று இன்று காலை நான்காம் கால யாக பூஜையுடன் பூர்ணாஹுதி செய்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசத்தை கோயில் உச்சியில் உள்ள கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது...