Skip to main content

Posts

Showing posts from August, 2023

மகான் சிதம்பரம் சட்டி சுவாமிகளின் 65ம் ஆண்டு குருபூஜை விழா முன்னிட்டு 1000 நபர்களுக்கு அறுசுவை உணவு அன்னதானம்

 திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் புதூர் கிராமத்தில் வாழ்ந்து மறைந்த மகான் சிதம்பரம் சட்டி சுவாமிகளின் மடாலயம் உள்ளது. மகானின் 65ம் ஆண்டு குருபூஜை விழா ஆடி அமாவாசையை முன்னிட்டு அவரது நினைவாக அறநிலையத்துறை, ஊர் பொதுமக்கள் மற்றும் செந்தில்குமார் ஏற்பாட்டில் 1000 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. குருபூஜை விழா ஏற்பாடுகள் அனைத்தையும் ஊர் பொதுமக்கள் சார்பாக செந்தில்குமார் அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார். அவர் ஜீவசமாதி அடைந்து 103 ஆண்டுகள் ஆகிறது. அவருக்கு 65 ஆம் ஆண்டு குருபூஜை விழா ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று 1000 நபர்களுக்கு சாதம், சாம்பார், வடை, பொரியல், அப்பளம், மோர் உள்ளிட்ட அறுசுவை உணவு அனைவருக்கும் அன்னதானம் வழங்கி சிறப்பாக குருபூஜை விழா நடைபெற்றது. சிதம்பரம் சட்டி சுவாமிகள் மிகவும் சிறப்பு வாய்ந்த சுவாமிகள். இப்பகுதியில் மகானாக வாழ்ந்து வந்தார். அவர் ஜீவசமாதி அடைந்த இன்றும் அவர்கள் போற்றி வருவதற்கான காரணங்கள் பல மகிமைகள் உள்ளது. அவர் மிகச்சிறந்த சித்த வைத்தியராக அப்பகுதி மக்களுக்கு சுற்றுவட்டார பொது மக்களுக்கு வைத்தியம் செய்து வந்துள்ளார். அவர் சிகிச்சை அளித்தால் நி...

பாஜக சார்பில் பிரிவினையை நினைவூட்டும் மௌன ஊர்வலம் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்ட கருத்தரங்கம்

திருவண்ணாமலை மாவட்டம், வெறையூர் கிராமத்தில் தேசப் பிரிவினையின் சோக வரலாற்றை நினைவுபடுத்தும் விதமாக பாஜக திருவண்ணாமலை தெற்கு ஒன்றிய  தலைவர் பழனிவேல் தலைமையில் மௌன ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் ஆர்எஸ்எஸ் வேலூர் கோட்ட இணை அமைப்பாளர் மணிகண்டன் சிறப்புரையாற்றினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கருத்தரங்க நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர் பிடி பழனிவேல் தலைமையுரை ஆற்றினார். மாவட்ட பொது செயலாளர் முருகன், மாவட்டச் செயலாளர் குமரன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு பொறுப்பேற்று சிறப்பான முறையில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.  மாவட்ட பொது செயலாளர்கள் ரமேஷ், சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பு சாரா மக்கள் சேவை பிரிவு மாநிலச் செயலாளர் ஏ கே ஆர் கதிரவன், மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பொதுச் செயலாளர் அறிவழகன், ஒன்றிய துணைத் தலைவர்கள் ரஞ்சன், குமாரி அம்மா, மணிகண்டன் உள்ளிட்ட ஏராளமானோர் இந்திய நாடு துண்டாடப்பட்ட சோக வரலாறு நினைவூட்டும் மௌன ஊர்வலம் ம...

3300 மரக்கன்றுகள் மியாவாக்கி முறையில் நட்டு அடர்வனம் மற்றும் உயிர்வேலி அமைக்க முயற்சி எடுத்துள்ள விவசாயி, சமூக ஆர்வலர்கள் பாராட்டு

திருண்ணாமலை அடுத்த சம்பந்தனூர் கிராமத்தில் அடர்வணம் அமைப்பதன் மூலமாக உயிர்வேலி அமைக்க புது முயற்சியாக அப்பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் தனது 7 ஏக்கர் நிலப்பரப்பில் கோவையைச் சேர்ந்த பசுமை சுரேஷ் என்பவரின் ஆலோசனையை பெற்று மியா வாக்கிய முறையில் 3300 மரக்கன்றுகளை நடுகிறார். பூவரசன், பூங்கன், இலுப்பை, சந்தனம், தேக்கு, நீர் மருது, வில்வம், நாவல், கருங்கொனை தாத்திரி, நாவல் உள்ளிட்ட 13 வகையான மரக்கன்றுகள் மொத்தம் 3300 மரக்கன்றுகள் மியாவாக்கி முறையில் நடப்படுகிறது. ஏழு ஏக்கர் நிலப்பரப்பில் திருவண்ணாமலை வனத்துறை சார்பில் இலவசமாக மரக்கன்றுகள் பெறப்பட்டுள்ளது. இந்த மரக்கன்றுகளுக்கு இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து தண்ணீர் ஊற்றினால் தற்போது நடப்படும் மரக்கன்றுகள் உயிர் வேலியாக மலரும் என்று தெரிவிக்கப்படுகிறது. மரங்கள் மூலமாக உயிர்வேலி அமைப்பதால் மற்ற விலங்கினங்கள் அனைத்தும் இங்கு வாழ்வதற்கு ஒரு வாழ்வாதாரத்தையும் ஏற்படுத்தப்படுவதாக கூறுகின்றனர். திருவண்ணாமலை அருமை லயன் சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இது போன்று தங்கள் நிலங்களிலும் மரக்கன்றுகள் நடுவதற்கு உறுதி ஏற்றுள்ளனர். தனது...