Skip to main content

Posts

Showing posts from July, 2023

கிரிவலப் பாதையில் தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரண்டு கண்களாக பாவிக்கும் அருணாச்சலம் மகா அன்னதான மடம்

திருவண்ணாமலை காஞ்சி சாலை, கிரிவலப் பாதையில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக ஆன்மீக மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் அருணாச்சலம் அடியார்கள், அருணாச்சலம் மகா அண்ணா மடம் என்னும் ஆன்மீக மதத்தை நிறுவி கடந்த 50 ஆண்டு காலமாக ஆன்மீகப் பணியில் சிறப்பான முறையில் ஈடுபட்டு வருகிறார். கிரிவலம் வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு மாதா மாதம் அன்னதானம் வழங்கி பக்தர்களின் பசிப்பிணியை போக்கி வருகிறார். திருவண்ணாமலை கிரிவலப்பாதை அடிஅண்ணாமலை ஊராட்சியை சேர்ந்த கே.அருணாச்சலம் அவர்கள் பாஜக ஆன்மீகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவின் மாவட்ட தலைவராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அருணாச்சலம் மகா அன்னதான மடம் மற்றும் நாகாத்தம்மன் திருக்கோயில் திருப்பணிகளை சிறப்பான முறையில் தொடர்ந்து அருணாச்சலம் அவர்கள் செய்து வருகிறார். அங்கு பௌர்ணமி தினத்தன்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஆன்மீகப் பணிகளில் இவர் தொடர்ந்து பல ஆண்டு காலமாக சிறந்து செயல்பட்டு வருகிறார். 1972 ஆம் ஆண்டு முதல் கடந்த 50 ஆண்டு காலமாக ஆன்மீகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். கிரிவலப் பாதையில் கடந்த 50 ...

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத விளம்பர திமுக அரசை கண்டித்து ஆன்மீகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு தலைவர் அருணாச்சலம் அடியார்கள் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் கண்டன ஆர்ப்பாட்டம்

 திருவண்ணாமலை கிரிவலப் பாதை காஞ்சி சாலையில் திருவண்ணாமலை வடக்கு ஒன்றியம், ஆடையூர் பஞ்சாயத்து சார்பில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்தும், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆன்மீகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் அருணாச்சலம் அடியார்கள் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத விளம்பர திமுக அரசை கண்டித்து பாஜகவினர் கிளை அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது இதுவே முதல் முறையாகும்.  திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் சுமார் 300 கிளைகளில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக ஆன்மீகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் அருணாச்சலம் அடியார்கள் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்களும், பொதுமக்களும் கலந்து கொண்டுகண்டன கோஷங்களை எழுப்பினர்.  பெண்களிடம் பாரபட்சம் பார்க்காமல் அனைத்து பெண்களுக்கும் ரூபாய் ஆயிரம் வ...

அருள்மிகு ஸ்ரீ ஜெயகாளியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் ஒன்றியம், செல்லங்குப்பம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஜெயகாளியம்மன் ஆலயத்தின் புனராவர்த்தன அஷ்டபந்தன கும்பாபிஷேகம் மிகவும் உங்களுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் விமரிசையாக நடைபெற்றது. கடந்த இரண்டு நாட்களாக கோ பூஜை, விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், யாகசாலை நிர்மாணம், முதல் கால பூஜை, யாகம் பூர்ணாஹீதி, சுவாமிக்கு அபிஷேகம்,  மங்கள இசை, குரு வந்தனம், விநாயகா அபிஷேகம், கோபூஜை, முதல் யாக சாலை பூஜை,  மஹா பூர்ணாஹீதி, சாந்தி ஓமம், தம்பதி பூஜை, இரண்டாம் யாககால பூஜை, மூன்றாம் யாக கால பூஜை, நான்காம் யாக கால பூஜை, 108 கலச அபிஷேகம்  உள்ளிட்டவைகள் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது.     இன்று அதிகாலை ஸ்ரீ ஜெயகாளியம்மன் கோயில் வளாகத்தில் நான்காம் கால பூஜை, தீபாராதனை, பூர்ணாஹீதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கடம் புறப்படுதல், கோபுரம் ஸ்தூபி, பரிவாரங்கள் மகா கும்பாபிஷேகம் மூல ஆலய விக்ரகங்களுக்கு மகா கும்பாபிஷேகம் செய்வதற்காக  கலச புறப்பாடு  நடைபெற்று ஸ்ரீ ஜெயகாளியம்மன் ஆலய கோபுர உச்சியில் கலச புனித ந...