Skip to main content

Posts

Showing posts from November, 2022

ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள் பாஜகவிற்கு படையெடுப்பு

 திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக, திருவண்ணாமலை வடக்கு ஒன்றிய ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலை அடுத்த கீழ் செட்டிபட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. ஒன்றிய பொதுச் செயலாளர் முருகன் வரவேற்புரை ஆற்றினார். இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் K.R.பாலசுப்பிரமணியன் அவர்கள் கலந்துகொண்டு கட்சியின் வளர்ச்சி குறித்து ஆய்வு நடத்தி, அனைத்து கட்சி நிர்வாகிகளும் கட்சி வளர்ச்சிக்காக பாடுபடுமாறு கேட்டுக் கொண்டார். புதிய ஒன்றிய தலைவராக செயல்படுவதற்கு விருப்பமுள்ளவர்கள் விருப்பம் தெரிவிக்குமாறு அறிவிக்கப்பட்டது. அதில் நான்கு பேர் தங்களது விருப்பத்தை தெரிவித்தனர்.  நான்கு நபர்களில் அதிக கட்சி உறுப்பினர்களின் ஆதரவு பெற்றவராக ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் ராஜேந்திரன் புதிய பொறுப்பு ஒன்றிய தலைவராக ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   திருவண்ணாமலை வடக்கு ஒன்றிய தலைவர் பதவிக்கு புதிய பொறுப்பாளர்களாக ஒன்றிய பொதுச் செயலாளர் ராஜேந்திரன் மற்றும் ஆதித்ய பழனிச்சாமி ஆகிய இருவரும் இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட தலைவர் K.R....

விலைவாசி உயர்வு, திமுகவின் ஊழல்களைக் கண்டித்து தண்டராம்பட்டில் கண்டன ஆர்ப்பாட்டம்

பால் விலை உயர்வை கண்டித்தும், சொத்து வரி உயர்வை கண்டித்தும், மின் கட்டண முறைகேட்டைக் கண்டித்தும் மற்றும்  திமுக ஆட்சியில் நடைபெற்றுவரும்  பல்வேறு ஊழல் முறைகேடுகளைக் கண்டித்தும் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு கிழக்கு ஒன்றியம் பாஜக சார்பில் அதன் ஒன்றிய தலைவர் அ.கோ.வெங்கடேசன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட செயலாளர் ராஜ லட்சுமி, திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் மாவட்ட பாஜக தலைவர் தர்மன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டனப் பேருரை நிகழ்த்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு திமுக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு பொறுப்பேற்ற யுக குரு கருடானந்தா மகராஜ் சுவாமிஜி ரதத்தை சிறப்பான முறையில் வழிநடத்திச் சென்றார்

அயோத்தியில் இருந்து புறப்பட்ட ராம ராஜ்ய ரத யாத்திரை திருவண்ணாமலை வருகை தந்தது.  கிரிவலம் வந்த ரதத்தை யுக குரு கருடானந்தா மகராஜ் சுவாமிஜி கன்னியாகுமரி முதல் காட்பாடி வரை பொறுப்பேற்று திருவண்ணாமலைக்கு வரவேற்றார்.  ரதத்தை பாஜகவினர், பக்தர்கள் மற்றும் அனைத்து இந்து இயக்கங்கள் சார்பிலும் வரவேற்றனர். 27 மாநிலங்களைக் கடந்து திருவண்ணாமலைக்கு வந்தடைந்த ராம ரத யாத்திரைக்கு திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சிறப்பான முறையில் வரவேற்பு அளித்து பூஜைகள் செய்து வழிபட்டனர். திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு நாயுடு மங்கலம் கலசப்பாக்கம் போளூர் வழியாக காட்பாடி வரை சென்ற ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு பொறுப்பேற்ற யுக குரு கருடானந்தா மகராஜ் சுவாமிஜி ரதத்தை சிறப்பான முறையில் வழிநடத்திச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

விலைவாசி உயர்வை கண்டித்து துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றிய பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

 திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் பேருந்து நிலையம் அருகே தமிழக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றிய பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர்  A.தங்கராஜி எம் ஏ தலைமை தாங்கி திமுக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து தலைமை உரையாற்றினார். எஸ்.சங்கர் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினர்களாக மாநில செயற்குழு உறுப்பினர் கருணாகரன், மாவட்ட துணைத்தலைவர் பானுநிவேதிதா, மாநில பொதுக்குழு உறுப்பினர் இளஞ்செழியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர். ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், கிருஷ்ணகுமார், ரத்னவேல் துணைத் தலைவர்கள் பாஸ்கரன்,தனசேகர், ஒன்றிய விவசாய அணித் தலைவர் அறுமுகம், மத்திய அரசு நலத்திட்டபிரிவு தலைவர் மணிகண்டன், சந்தோஷ் ஆன்யப்பன், சுரேஷ், கார்த்திக் மற்றும் 400க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பால் விலை உயர்வு, மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்டவற்றிற்கு கண்டனம் தெரிவித்து திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி...