Skip to main content

Posts

Showing posts from November, 2025

அகில இந்திய தலைவர் விருகை டாக்டர் வி.என்.கண்ணன் அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்!

  உலகப் புகழ் பெற்ற அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் திருக்கார்த்திகை மகா தீப திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் அனைவரையும் வரவேற்கும் விதமாக இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் மற்றும் நிலத்தரகர்கள் சங்கம் திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் அலுவலகம் திறப்பு விழா எடப்பாளையம் பைபாஸ் கார்னரில் நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத் தரகர்கள் நலச்சங்கம் ரியல் எஸ்டேட் தொழிலாளர்களின் பாதுகாவலர் பாசமிகு அகில இந்திய தலைவர் விருகை டாக்டர் வி.என்.கண்ணன் திருவண்ணாமலை மாநகரில் அலுவலகம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். திருவண்ணாமலை மாநகர துணை தலைவர் டி.செந்தில்குமார் அறக்கட்டளை வளர்ச்சிக்காக ரூ.10,000 நிதி உதவியை அகில இந்திய தலைவரிடம் வழங்கினார். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.சீனிவாசன் சுந்தரம், மாவட்ட செயலாளர் வி எம் பாபு, மாவட்ட பொருளாளர் பி.சங்கர்கணேஷ் ஆகியோர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். மத்திய மாவட்ட தலைவர் அகத்தியன், வடக்கு மாவட்ட தலைவர் காழியூ...

எம்.எல்.ஏ உத்தரவிட்ட பிறகும் உள்ளூர் திமுக பிரமுகர்களின் தூண்டுதலால் பாதை வசதி ஏற்படுத்தி தராத அதிகாரிகளால் 2 கிலோமீட்டர் சுற்றி செல்லும் அவலம், பாதையை திறக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என கிராம மக்கள் எச்சரிக்கை

  திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், வாழவச்சனூர் கிராமம் காளியம்மன் கோயில் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக அமைத்து வரும் நிலையில் ஆக்கிரமிப்பு  அகற்றப்பட்டு அங்கிருந்த வீடுகள் அகற்றப்பட்டு தற்போது சாலை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது காளியம்மன் கோவில் தெரு 50 குடும்பத்தினை சேர்ந்தவர்களும் பொது பாதை ஏற்படுத்தி தரக்கோரி செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி நேரில் வந்து பார்வையிட்டு பொதுபாதை அமைத்து தர தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் உத்தரவிட்டு சென்றார். இருப்பினும் உள்ளூரில் உள்ள திமுக பிரமுகரின் தூண்டுதலால் ஒருவர் அந்தப் பாதையை ஆக்கிரமிப்பு செய்து தகர சீட் போட்டு அடைத்து மூடிவிட்டார். இதனால் காளியம்மன் கோவில் தெரு ஐம்பது குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பொது வழியில்லாமல் இரண்டு கிலோமீட்டர் சுற்றி தான் தங்கள் சொந்த வீடுகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  அதுமட்டுமில்லாமல் பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர் தங்கள் வீடுகளுக்கு செல்வதற்க...