Skip to main content

Posts

Showing posts from May, 2023

10 அடி பள்ளம் தோண்டி பே கோபுரம் மற்றும் மதில் சுவர்களின் உறுதித்தன்மையை பாதிக்கும் வகையில் நகராட்சி பணிகள், மாற்று இடத்தில் பணிகளைத் தொடர பாஜகவினர் கோரிக்கை மனு.

அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பே கோபுரம் மதில் சுவர் மற்றும் கோபுரத்தின் உறுதித் தன்மையை பாதிக்கும் வகையில் 10 அடி ஆழம் பள்ளம் தோண்டுவதை நிறுத்திவிட்டு  வேறு இடத்தில் நகராட்சி பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் மாவட்டத் தலைவர் K.R.பாலசுப்பிரமணியன் தலைமையில் ஏராளமான பாஜகவினர் இணைந்து மனு அளித்தனர். பஞ்சபூத தலங்களில் அக்னி தளமாக விளங்கக்கூடிய மலையை சிவனாக வணங்கக்கூடிய உலகப் புகழ் பெற்ற அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் மேற்கில் உள்ள பே கோபுரம், அதையொட்டி உள்ள மதில் சுவர்களை சேதப் படுத்தும் வகையில் கனரக இயந்திரங்களை வைத்து 10 அடிக்கு மேல் ஆழமாக பள்ளம் எடுத்த விடியா அரசின் நகரசபையின் பணிகளை பொது மக்களின் சக்தியை திரட்டி முற்றுகையிட்டு கோயிலுக்கு ஆபத்து ஏற்படுத்தும் பணிகளை திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் நிறுத்தப்பட்டது.   நிறுத்திய பின்னர் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து திருவண்ணாமலை நகராட்சியின் கோயில் பாதிப்பு பணிகளை இப்போது செய்ய உத்தேசித்துள்ள இடத்திற்க்கு எதிர்புறம்  செய்ய வேண்டும் என்று ...

100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி, இனிப்புடன் கூடிய சில்வர் பாக்ஸ் வழங்கி அசத்திய ஒன்றிய தலைவர் ராஜேந்திரன்

 திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக பகுதிக்கு உட்பட்ட திருவண்ணாமலை வடக்கு ஒன்றியம், கீழ்செட்டிபட்டு கிராமத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 100வது மனதின் குரல் நிகழ்ச்சி வெகு விமரிசையாக ஒளிபரப்பு செய்யப்பட்டு விழா போல் கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை வடக்கு ஒன்றிய பாஜகவின் ஒன்றிய தலைவர் ஜி.ராஜேந்திரன் தலைமையில் கீழ்செட்டிபட்டில் உள்ள அவரது சொந்த பூத்தில் நடைபெற்ற மன் கி பாத் நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் உரையை ஆரம்பம் முதல் இறுதி வரை கேட்டு ரசித்தனர். பாரத பிரதமரின் மனதின் குரல் உரையின் போது அனைவரும் பாரத அன்னையின் புகழ் ஓங்குக என்று கோஷமிட்டு கரவொலி எழுப்பி உற்சாகத்துடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஒன்றிய தலைவர் ‌ஜி.ராஜேந்திரன் ஏற்பாட்டில் இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்புடன் கூடிய சில்வர் பாக்ஸ் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.