Skip to main content

Posts

Showing posts from December, 2021

நல்லாட்சி தினமான முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாளில் பாஜக கொடியேற்றி இலவச மருத்துவ முகாம் நடத்திய மருத்துவர் அணி மாவட்ட தலைவர் ராஜா ஹரிகோவிந்தன்.

திருவண்ணாமலை அடுத்த வடஆண்டாபட்டு தீபமலை மருத்துவமனையில்   முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாளை பாஜக கொடியேற்றி, இலவச மருத்துவ முகாம் நடத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக மருத்துவ அணித் தலைவர் டாக்டர் ராஜா ஹரி கோவிந்தன். முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாள் நல்லாட்சி தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுவதை முன்னிட்டு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக மருத்துவர் அணி மற்றும் தீப மலை ஆன்மிகத் தொண்டு இயக்கம் இணைந்து பாஜக கொடியேற்று விழா மற்றும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. திருவண்ணாமலை அடுத்த வடஆண்டாபட்டு கிளையில் பாஜக கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. அதனை அடுத்து மருத்துவ முகாம் திருவண்ணாமலை வடஆண்டாபட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகில் உள்ள தீபமலை மருத்துவமனை மருந்தகத்தில் நடைபெற்றது. சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த கிராமங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் மருத்துவ முகாமில் கலந்துகொண்டு சர்க்கரை, ரத்தக் கொதிப்பு, உடல் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற...

தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வலியுறுத்தி பாஜகவினர் மாட்டுவண்டியில் சென்று நூதன முறையில் மனித சங்கிலி போராட்டம்

 திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலை ரயில்வே கேட் அருகே தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வலியுறுத்தி திருவண்ணாமலை ஒருங்கிணைந்த மாவட்ட பாஜகவினர் மாட்டுவண்டியில் சென்று நூதன முறையில் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். திருவண்ணாமலை ஒருங்கிணைந்த மாவட்ட  பாரதிய ஜனதா கட்சி ஓபிசி அணி சார்பாக பெட்ரோல், டீசல் வாட் வரியை குறைக்க வேண்டி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.  மனித சங்கிலி போராட்டத்திற்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக ஓபிசி அணி தலைவர் டாக்டர் சுந்தர்ராஜன், வடக்கு மாவட்டம் ஓபிசி அணி தலைவர் நித்தியானந்தம் ஆகியோர் தலைமை வகித்தனர்.  திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் ஜீவானந்தம், வடக்கு மாவட்ட தலைவர் சாசா வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.    மாவட்ட பொதுச் செயலாளர்கள் சதீஷ் ரமேஷ்,  சேகர், நகர தலைவர் திருமாறன் போராட்டத்தை முன்னின்று நடத்தினார்.ஓபிசி அணி மாவட்ட செயலாளர் செந்தில்வேல்,ஓபிசி அணி நகர தலைவர் ஸ்ரீதர், ஓபிசி அணி மாவட்ட பொதுச்செயலாளர் யுவராஜ், மகளிர் அணி துணைத் தலைவர் ராஜதமயந்தி, மாவட்ட மகளிரணி செயலாளர் மாலதி, மாவட்ட பொதுச்செய...

பாஜக மாவட்ட துணைத்தலைவர் கவிதா பிரதீஷ்குமார் 25வது வார்டில் போட்டியிடுவதற்கு விருப்பமனு அளித்தார்.

 திருவண்ணாமலை ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பாஜக மாவட்ட துணைத்தலைவர் கவிதா பிரதீஷ்குமார் உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் ஆர்வத்துடன் விருப்ப மனு அளித்து வருகின்றனர். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக, மாவட்ட துணைத்தலைவர் கவிதா பிரதீஷ்குமார் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் திருவண்ணாமலை நகர 25வது வார்டில் போட்டியிடுவதற்கு விருப்பமனுவை மாவட்ட பொதுச்செயலாளர் சதீஷ் மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர் விஜயன் உள்ளிட்டவர்களிடம் வழங்கினார்.  தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு மாநில செயலாளர் பிரதீஷ்குமார், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் பொன்மலர் மற்றும் நகர தலைவர் ஆறுமுகம் உள்ளிட்ட பாஜகவினர் உடனிருந்தனர்.  பாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரின் சிறப்பான செயல்பாடுகளாலும், கவிதா பிரதீஷ்குமார் தனது திருவண்ணாமலை 25வது வார்டில் பாஜக சார்பில் சிறப்பாக பணியாற்றி வருவதாலும் கவிதா பிரதீஷ்குமார் அவர்களுக்கு பாஜகவின் சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கும் பட்சத்தில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக பொதுமக்களிடையே நல்ல கருத்து நிலவி வருகிறது.